வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி:
‘நீதிமன்ற வழக்குகளில், மனுதாரர்களின் ஜாதி அல்லது மதத்தை
குறிப்பிடும் நடைமுறை இனி தவிர்க்கப்பட வேண்டும்’ என, உச்ச
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான்
குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, கணவன் – மனைவி
இடையிலான சச்சரவு தொடர்பான வழக்கை, இடமாற்றம் செய்யும் மனுவை
விசாரணைக்கு ஏற்ற போது, உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை
பிறப்பித்தது.
இது குறித்து நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, அசானுதீன்
அமானுல்லா அமர்வு பிறப்பித்த உத்தரவு:உச்ச நீதிமன்றம் உயர்
நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் தாக்கல்
செய்யப்படும் வழக்குகளில், வாதி – பிரதிவாதியின் ஜாதி அல்லது மதம்
தொடர்பான விபரங்கள் இடம் பெறுவது தவிர்க்கப்பட வேண்டும்.
இதுபோன்ற
நடைமுறைகள் வழக்கு விசாரணைக்கு தேவையற்றதாக நீதிமன்றம்
கருதுகிறது. இனி வரும் காலங்களில், வாதி – பிரதிவாதிகளின் ஜாதி, மத
விபரங்களை மனுவில் குறிப்பிடும் வழக்கத்தை நீதிமன்றங்கள்
தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு உத்தரவில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement