சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய சர்ச்சையைத் தொடர்ந்து, சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்த திருச்சி வரை சில மாவட்டங்களுக்கு விரைவு பேருந்து சேவை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பேருந்து சேவையை இன்று அமைச்சர் சிவசங்கர் மாதவரம் பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார். தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இயக்குவதில் சிக்கல்கள் நீடித்து வருகிறது. போதிய கழிப்பிடமோ, உணவகமோ, பேருந்து நடத்தும் இடமோ இல்லாத கிளாம்பாக்கத்தை அவசர அவசரமாகத் திறந்து […]
