Sembai Sangeeta Utsavam Second Day Concert | செம்பை சங்கீத உற்ஸவம் இரண்டாம் நாள் கச்சேரி

பாலக்காடு:பாலக்காடு அருகே கோட்டாயி பார்த்தசாரதி கோவிலில், செம்பை ஏகாதசி சங்கீத உற்ஸவத்தின் இரண்டாம் நாளான நேற்று, சுகுமாரி நரேந்திர மேனனின் சங்கீத கச்சேரி நடந்தது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில்.

இங்கு, ஆண்டு தோறும் மாசி மாதம் ஏகாதசி உற்ஸவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு உற்ஸவத்திற்கு கடந்த 16ம் தேதி கொடியேற்றப்பட்டது.

விழாவை நேற்றுமுன்தினம் பிரபல இசைக்கலைஞர் டி.வி.கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்து சங்கீத கச்சேரி நடத்தினார். தொடர்ந்து விஜய் ஜேசுதாசின் கச்சேரி நடந்தது.

இரண்டாம் நாளான நேற்று மாலை, 6:30 மணிக்கு சுகுமாரி நரேந்திர மேனனின் சங்கீத கச்சேரி நடந்தது.

இவருக்கு ஜயதேவன் (வயலின்), ஆலுவா கோபாலகிருஷ்ணன் (மிருதங்கம்), வெள்ளிநேழி ரமேஷ் (முகர்சங்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர்.

ஏகாதசி உற்சவ நாளான இன்று காலை, 8:30 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனை, மண்ணுார் ராஜகுமாரன் உண்ணி தலைமையில் பஞ்சரத்ன கீர்த்தனை, இளம் கலைஞர்களின் சங்கீத ஆராதனை நடக்கிறது.

மாலை, 6:00 மணிக்கு, சென்னை ராமநாதனின் சாக்ஸபோன், பாதிரியார் போள் பூவதிங்கள், பிரகாஷ் உள்ளியேரி குழுவின் ஹார்மோனியம் இசை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை ஏகாதசி உற்சவம் நிறைவடைகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.