ராஞ்சி: இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 112 ரன்னுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்ட் முடிவில், இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் ராஞ்சியில் இன்று (பிப்.,23) துவங்கியது. இதில் ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஆகாஷ் தீப் அறிமுகமானார்.
இங்கிலாந்து அணியின் ஜாக் கிராலே, பென் டக்கெட் துவக்கம் தந்தனர். அறிமுக வீரர் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் மிரட்டினார். அவரது பந்தில் பென் டக்கெட் (11), போப் (0), கிராலே (42) வரிசையாக வெளியேறினர். பேர்ஸ்டோவ் (38) அஸ்வின் சுழலிலும், ஸ்டோக்ஸ் (2) ஜடேஜா சுழலிலும் எல்பிடபிள்யூ ஆகினர். உணவு இடைவெளி வரை இங்கிலாந்து அணி 5 விக்., இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 16 ரன்னில் விளையாடி வருகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement