அரியானா: 15 வயது சிறுமியை கடத்தி 20 நாட்களாக கூட்டு பலாத்காரம்

ஜிந்த்,

அரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில், 20 நாட்களுக்கு முன் 15 வயது சிறுமியை காணவில்லை என கூறி அவருடைய தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில், சந்தேகத்தின் பேரில் 3 பேரை விசாரிப்பது என போலீசார் முடிவு செய்தனர்.

இந்த விசாரணையில், சிறுமியை அவர்கள் கடத்தி சென்றது தெரிய வந்தது. அவர்களில் 2 பேர் சிறுமியின் கிராமத்தில் வசிப்பவர்கள். 3-வது நபர் உத்தர பிரதேசத்தில் வசித்து வருபவர் என போலீசார் தெரிவித்தனர்.

சிறுமியிடம் நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. அவர்கள் 3 பேரும் சிறுமியை கடத்தி சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என கூறியுள்ளார். 20 நாட்களாக இந்த கொடுமை நடந்துள்ளது. இதுபற்றி தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.