Ameer: `என்னை டார்கெட் செய்து NCB, ED விசாரணையா..?' – இயக்குநர் அமீர் விளக்கம்!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண்ட இயக்குநர் அமீர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது,

இயக்குநர் அமீர்

“ரமலான் மாதம் 30 நாள்கள் நோன்பு நேற்று முடித்து, இன்று ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியோடு் கொண்டாடுகிறோம். அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றவர்,

அமலாக்கத்துறை சோதனை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “என்ன எடுத்தார்கள் என்று சொல்ல முடியாது, என்.சி.பி 11 மணி நேர விசாரணை மற்றும் இ.டி ரெய்டு நடந்தது உண்மைதான். ஆனால், என்ன எடுத்தார்கள் என்று அவர்கள்தான் சொல்ல வேண்டும்.

அமீர்

இந்த விவகாரத்தில் தொடக்கத்திலிருந்து நான் சொல்வது ஒன்றுதான், எந்த விசாரணைக்கும் நான் தயார். என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பு இல்லை என்பதை நிரூபிப்பேன்.

இறைவன் மிகப்பெரியவன் என்பதுதான் என்னிடமிருந்து வரும் வார்த்தை. டார்கெட் செய்து விசாரணை நடைபெறுகிறதா என்று உறுதியாகச் சொல்ல முடியாது, இது குறித்து உறுதியாக ஒரு நாள் பேசுவேன்.

இயக்குநர் அமீர்

இ.டி ரெய்டில் உள்நோக்கம் உள்ளதா என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், என்னால் ஒரு மாதமாகப் பேச முடியவில்லை என்பது உண்மை, இறைவன் மிகப்பெரியவன் என கடந்து போகிறவன் நான்.

விசாரணை நேர்மையாக நடைபெறுகிறது. விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா இல்லையா என்பது எனக்கு தெரியாது, நேற்று இரவு இ.டி சோதனை முடிவடைந்தது. இது குறித்து முழுமையாகப் பேச கொஞ்சம் நேரம் தாருங்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.