மறுபிறவி அறுக்கும் துளசி !!! எந்த இடத்தில் துளசி செடி வளர்ந்திருக்கிறதோ, அங்கே மும்மூர்த்திகளுடன், சகல தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். சூரியனைக் கண்டதும் இருள் மறைவதுபோல் துளசியின் காற்றுப்பட்டாலே பாவங்களும், நோய்களும் விலகிவிடும். துளசி இலையை தெய்வ பிரசாதமாக உண்பவருக்கு சகல பாவங்களும் தொலையும். எவரது இல்லத்தில் துளசிசெடிகள் நிறைய இருக்கிறதோ, அந்த இடம் புண்ணியமான திருத்தலம். அங்கு அகால மரணம், வியாதி முதலியன ஏற்படாது. துளசி செடிகளை திருமாலின் அம்சமாக மதித்து பூஜை செய்யவேண்டும். துளசி தளத்தால் திருமாலை அர்ச்சனை செய்து பூசிப்பவருக்கு மறுபிறவி கிடையாது. துளசியை பூஜை செய்ததின் பயனாக சீதைக்கு ராமபிரான் கணவராக கிடைத்தார் என்று […]
