குற்றவாளிகளை ஊடகங்களுக்கு முன் கொண்டுவந்து கேள்வி கேட்கக் கூடாது – சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த

குற்றவாளிகளை ஊடகங்களுக்கு முன் கொண்டுவந்து கேள்வி கேட்கக் கூடாது என சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பாராளுமன்றத்தில் (11) தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்து தெளிவான நிலைபேறான தீர்வொன்று அவசியம். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

தற்போது பாதாள உலகத்தினரால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தாக்கம் மற்றும் பயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சந்தேக நபர்களைக் கொண்டு வந்து கேள்வி கேட்பதும் பொலிஸாரினால் கேட்பதும் ஊடகங்களில் காட்டப்படுகின்றன. வரலாற்றில் கடுமையான குற்றங்கள் நடந்தபோதும் ஊடகங்களின் முன்னிலையில் கேள்வி கேட்பதில்லை. எமது நாட்டின் குற்றவியல் சட்டம் நகைச்சுவையாக உள்ளது.

சட்டத்திற்குக் காணப்படும் பயத்தை இல்லாது செய்ய வேண்டாம். இந்த இரண்டு விடயங்களும் நாட்டில் குற்றங்களின் அதிகரிப்பிற்கு ஏதுவாகலாம் என்றும் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த மேலும் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.