MI vs PBKS: ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 2 சுற்று நேற்று (ஜூன் 01) அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. அதில் ஹர்திக் பாண்டிய தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 203 ரன்கள் எடுத்திருந்தது. 204 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவர்களில் 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அவர் 87 ரன்களை எடுத்திருந்தார்.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மகிளா ஜெயவர்த்தனே மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் பராஸ் சத்தம் போட்டுக் கொண்டே இருக்கிறார். அவர்கள் ஹர்திக் பாண்டியாவிடம் உயரமான மற்றும் உயரம் குறைந்த பந்து வீச்சாளர்களிடம் மாற்றி மாற்றி பயன்படுத்துமாறு சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். மகிளா ஜெயவர்த்தனே ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத ஒரு வீரர். அவர் பல அணிகளில் இடம் பிடித்து விளையாடி இருக்கிறார்.
அதற்காக உங்கள் கேப்டனுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கொண்டே இருக்கக் கூடாது. அணியின் வீரர்களை முதலில் நீங்கள் நம்ப வேண்டும். ரோகித் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் உலக கோப்பை வென்றவர்கள். அவர்களை தங்கள் இயல்பில் விளையாட அனுமதிக்க வேண்டும் என கடுமையாக விமர்சித்துள்ளார் ஹர்பஜன் சிங்.
மேலும் படிங்க: Glenn Maxwell odi records: மேக்ஸ்வெல்லின் ஓடிஐ சாதனைகள் என்னென்ன? முழு லிஸ்ட்!
மேலும் படிங்க: ‘ஈ சாலா கப் நம்தே’.. இவர் தான் ஆட்டநாயகன்.. டேவிட் வார்னர் உறுதி!