ஆதார் கார்டில் முகவரி விவரங்களை ஆன்லைனில் மாற்றுவது எப்படி?

Change Aadhar card address at Home: ஆதார் அட்டை பல அரசு மற்றும் தனியார் பணிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஏதேனும் பிழை இருந்தால், நமக்கு பெரிய சிக்கல் ஏற்படலாம். அதனால்தான் ஆதார் அட்டையை புதுப்பித்து வைத்திருப்பது மிகவும் முக்கியம் ஆகும்.

இந்நிலையில் சமீபத்தில் UIDAI – Unique Identification Authority of India ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. இதன் கீழ், பயனர்கள் ஆதார் அட்டையில் எழுதப்பட்ட முகவரியை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கான கடைசி தேதி வருகிற ஜூன் 14 ஆம் தேதி என்றும் அறிவித்து இருந்தது. எனவே தற்போது ஆதார் அட்டையில் இருக்கும் முகவரியை எவ்வாறு மாற்றலாம் என்பதை இந்த கட்டுரை மூலம் தெரிந்துக்கொள்ளலாம். ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவது ஒரு எளிதான செயல்முறையாகும், இதை நீங்கள் ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் இரண்டு முறையிலும் செய்துக் கொள்ளலாம்.

ஆதார் அட்டையில் முகவரியை ஆன்லைனில் எவ்வாறு மாற்றுவது என்று பார்ப்போம்?

முக்கியமான விஷயங்கள்: பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் (OTP பெற) மற்றும் புதிய முகவரிச் சான்று ஆவணம் (PDF/JPEG ஸ்கேன் நகல்)

முதலில் https://myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

அதன் பிறகு ஆதார் எண் மற்றும் OTP உதவியுடன் உள்நுழையவும்.

ஆதார் புதுப்பிப்பு பிரிவுக்குச் சென்று “முகவரி புதுப்பிப்பு” விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.

புதிய முகவரியை நிரப்பவும்: புதிய முகவரித் தகவலை நிரப்பவும் மற்றும் முகவரிச் சான்றிதழைப் பதிவேற்றவும்.

முன்னோட்டமிட்டு சமர்ப்பிக்கவும்: தகவல் சரியானதா இல்லையா என்பதைச் சரிபார்த்து பின்னர் சமர்ப்பிக்கவும்.

உங்களுக்கு ஒரு புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN) கிடைக்கும். URN உதவியுடன், நீங்கள் உங்களின் நகலின் நிலையைக் கண்காணிக்கலாம்.

முகவரிச் சான்றாக செல்லுபடியாகும் ஆவணங்கள்

மின்சார பில், 
தண்ணீர் பில்
வங்கி அறிக்கை
ரேஷன் கார்டு
பாஸ்போர்ட்
கேஸ் இணைப்பு புத்தகம்
முகவரியை உள்ளடக்கிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அனைத்து சான்றிதழும் செல்லுபடியாகும்.

மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த இலவச சேவை UIDAI ஆல் பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த சேவை ஜூன் 14, 2023 வரை இலவசம் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இதற்கான காலக்கெடுவை ஜூன் 14 2025 வரை நீட்டித்துள்ளது. 

ஆதார் அட்டையின் உண்மை தன்மையை மேம்படுத்தவும், ஆதார் கார்டு வைத்திருக்கும் பொதுமக்களின் அடிப்படை தகவல்கள் உண்மை தன்மை உறுதி செய்யும் வகையிலும் ஆதார் அட்டை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் முகவரியை மேம்படுத்த வேண்டும் என UIDAI அறிவித்துள்ளது. இந்த தேதிக்குப் பிறகு, ஆதார் அட்டையில் எந்தவொரு மாற்றத்திற்கும் ரூ. 50 கட்டணம் செலுத்த வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் இலவசமாக தங்கள் அடையாள சான்று (PoI) மற்றும் முகவரி சான்று (PoA) போன்றவற்றை மேம்படுத்த முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.