திருப்பதி பக்தர்கள் கூட்டம் காரணமாக திருப்பதி கோவிலில் தரிசனத்துக்கு 20 மணி நேரம் காத்திருக்க நேரிட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை, இன்று ஞாயிறுக்கிழமை என வார விடுமுறை நாட்கள் என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. நேற்று இலவச தரிசனத்தில், வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியதால் சிலாதோரணம் வரை 3 கிலோ மீட்டர் வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். எனவே இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் ஆகும் […]
