சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூன் 15) குரூப்-1, 1 ஏ தேர்வுகள் நடைபெற்ற நிலையில், இதன் முடிவுகள் அடுத்த இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் தெரிவித்து உள்ளார். இன்று நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பிரபாகர், “சென்னையில் ஏறத்தாழ 170 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. 72 பணிகளுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. […]
