Rajini: "'கண்ணப்பா' படத்தைப் பார்த்த பிறகு ரஜினிகாந்த்…." – நெகிழ்ந்த மோகன் பாபு

நாட்டாமை படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன ‘பெத்தராயுடு’ படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஓட்டி மோகன் பாபுவுடன் நடிகர் ரஜினிகாந்த் நேற்று (ஜூன் 16) கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

மேலும், மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கண்ணப்பா’ படத்தையும் குடும்பத்துடன் பார்த்திருக்கிறார். இதனை மோகன் பாபு புகைப்படத்துடன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

ரஜினிகாந்த்- மோகன் பாபு - விஷ்ணு மஞ்சு
ரஜினிகாந்த்- மோகன் பாபு – விஷ்ணு மஞ்சு

மோகன் பாபு வெளியிட்டிருக்கும் பதிவில், “‘பெத்தராயுடு’ படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதே நாளில் என் சிறந்த நண்பர் ரஜினிகாந்த் அவரது குடும்பத்துடன் கண்ணப்பா திரைப்படத்தைப் பார்த்தார்.

படத்தைப் பார்த்த பிறகு அவர் அளித்த அன்பு, அரவணைப்பு மற்றும் ஊக்கம் ஆகியவற்றை என் வாழ்நாளில் மறக்க முடியாதவை. நன்றி நண்பர்” என்று பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.