சிந்து நதிகளின் நீரை ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்: 113 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் கட்ட ஆய்வு

புதுடெல்லி: சிந்து நதி​களின் நீரை பஞ்​சாப், ஹரி​யா​னா, ராஜஸ்​தானுக்கு திருப்ப புதிய திட்​டம் தீட்​டப்​பட்டு உள்​ளது. இதற்​காக 113 கி.மீ. தொலை​வுக்கு கால்​வாய் அமைக்க முதல்​கட்ட ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. சிந்து நதி கட்​டமைப்​பில் சிந்​து, ஜீலம், செனாப், ரவி, பியாஸ், சட்​லஜ் ஆகிய 6 நதி​கள் உள்​ளன.

இந்த நதி கட்​டமைப்பு நீரை பகிர்ந்து கொள்​வது தொடர்​பாக கடந்த 1960-ம் ஆண்​டில் இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​படி கிழக்கு பகு​தி​யில் பாயும் ரவி, பியாஸ், சட்​லஜ் ஆகிய 3 நதி​களின் நீரை இந்​தியா பயன்​படுத்தி வரு​கிறது. இதன்​மூலம் பஞ்​சாப், ஹரி​யானா மாநிலங்​கள் பலன் அடைகின்​றன. மேற்கு பகு​தி​யில் பாயும் சிந்​து, ஜீலம், செனாப் ஆகிய 3 நதி​களின் நீரை பாகிஸ்​தான் பயன்​படுத்தி வந்​தது.

கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்​காமில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதல் காரண​மாக சிந்து நதி நீர் ஒப்​பந்​தத்தை மத்​திய அரசு நிறுத்தி வைத்து உள்​ளது. இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் செனாப் நதி​யில் கட்​டப்​பட்​டுள்ள பஹலி​கார், சலால் ஆகிய 2 அணை​களில் இருந்து பாகிஸ்​தானுக்கு தண்​ணீர் திறந்​து​விடு​வது நிறுத்​தப்​பட்​டது.

இதே​போல சிந்​து, ஜீலம் நதி​களின் நீரும் முழு​மை​யாக தடுத்து நிறுத்​தப்​பட்டு உள்​ளது. அடுத்த கட்​ட​மாக காஷ்மீரின் சாவல்​கோட், கிர்​தாய், பகல் துல், ராட்​லி, கிரு, கவார் ஆகிய 6 இடங்​களில் புதி​தாக அணை​கள் கட்ட மத்​திய அரசு முடிவு செய்​துள்​ளது. இந்த சூழலில் சிந்து நதி​களின் நீரை ஜம்மு காஷ்மீரில் இருந்து பஞ்​சாப், ஹரி​யா​னா, ராஜஸ்​தான் மாநிலங்​களுக்கு திருப்ப மத்​திய அரசு விரி​வான திட்​டத்தை தீட்டி உள்​ளது.

இதற்​காக காஷ்மீரில் இருந்து ராஜஸ்​தான் வரை 113 கி.மீ. தொலை​வுக்கு மிகப் பெரிய கால்​வாய் கட்ட முடிவு செய்​யப்​பட்டு உள்ளது. இதற்​கான முதல்​கட்ட ஆய்வு தொடங்​கப்​பட்டு இருக்​கிறது. இதுகுறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: சிந்து நதி கட்​டமைப்​பில் 100 சதவீதம் நீரை​யும் பயன்​படுத்த மத்​திய அரசு முடிவு செய்​திருக்​கிறது.

இதற்​காக தற்​போது பயன்​பாட்​டில் உள்ள 13 கால்​வாய்​களின் நீளம் அதி​கரிக்​கப்பட உள்​ளது. காஷ்மீரில் இருந்து பஞ்​சாப், ஹரி​யா​னா, ராஜஸ்​தானுக்கு புதி​தாக கால்​வாய் கட்​டப்பட முடிவு செய்​யப்​பட்டு உள்​ளது. அடுத்த 3 ஆண்​டு​களில் ராஜஸ்​தானின் கடைநிலை பகுதி வரை சிந்து நதி நீர் சென்​றடை​யும்.

இதன்​மூலம் இமாச்சல பிரதேசம், காஷ்மீர், பஞ்​சாப், ஹரி​யா​னா, ராஜஸ்​தான் ஆகிய மாநிலங்​களில் விவ​சா​யம் செழித்​தோங்​கும். புதி​தாக அணை​கள் கட்​டப்​பட்​டு, நீர் மின் நிலை​யங்​களும் அமைக்​கப்பட உள்​ளன. பாகிஸ்​தானின் 80 சதவீத விவ​சா​யம் சிந்து நதி கட்​டமைப்பை மட்​டுமே நம்​பி​யிருக்​கிறது.

இந்​தியா தண்​ணீரை நிறுத்​தி​னால் அந்த நாடு படிப்​படி​யாக பாலை​வன​மாக மாறும். பாகிஸ்​தானின் நீர் மின் உற்​பத்​தி​யில் மூன்​றில் ஒரு பங்கு மின் உற்​பத்தி சிந்து நதி​களை சார்ந்து உள்​ளன. இதனால் பாகிஸ்​தானின் மின் உற்​பத்​தி​யும் மிகக் கடுமை​யாகப் பாதிக்​கப்​படும்.

சிந்து நதி​களில் தண்​ணீரை திறந்​து​விடக்​கோரி பாகிஸ்​தான் அரசு தரப்​பில் ஏற்​கெனவே 4 கடிதங்​கள் அனுப்​பப்​பட்டு உள்​ளன. அந்த நாடு சார்​பில் உலக வங்​கி​யின் உதவி​யும்​ கோரப்​பட்​டிருக்​கிறது. ஆ​னால்​ இந்த விவ​காரத்​தில்​ உலக வங்​கி தலை​யி​டாது என்​று அதன் தலை​வர்​ அஜய்​ பங்​​கா கூறியுள்​ளார்​. இவ்​​வாறு மத்​திய அரசு வட்​​டாரங்​கள்​ தெரிவித்​தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.