கர்நாடகாவில் வேலை நேரத்தை 10 மணி நேரமாக்க முடிவு: தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு

பெங்களூரு: ​நாட்​டின் ஐடி தலைநக​ராக பெங்​களூரு விளங்கி வரு​கிறது. இங்​குள்ள தனி​யார் நிறு​வனங்​களின் தலைமை செயல் அதி​காரி​கள் சிலர், ஊழியர்​களின் தினசரி வேலை நேரத்தை அதி​கரிக்க வேண்​டும் என்று கர்​நாடக அரசுக்கு கடிதம் அனுப்​பினர். அதன் அடிப்​படை​யில், ஊழியர்​களின் வேலை நேரத்தை 10 மணி நேர​மாக உயர்த்த கர்​நாடக அரசு​முடி​வெடுத்​துள்​ளது. இதற்​காக கர்​நாடக தொழிலா​ளர் சட்​டத்​தில் திருத்​தங்​களை மேற்​கொள்ள திட்​ட​மிட்​டுள்​ளது.

அதன்​படி கர்​நாடக கடைகள் மற்​றும் வணிக நிறு​வனங்​கள் சட்​டத்​தின்​படி, தினசரி வேலை நேரம் 9 மணி நேர​மாக வரையறுக்​கப்​பட்​டுள்​ளது. கூடு​தல் நேரம் (ஓவர் டைம்) வேலை பார்த்​தா​லும் ஒரு மணி நேரம் மட்​டுமே பார்க்க வேண்​டும். மூன்று மாதங்​களில் அதி​கபட்​ச​மாக 50 மணி நேரம் மட்​டுமே ஓவர் டைம் வேலை செய்ய அனு​ம​திக்க வேண்​டும் என விதி​முறை வகுக்​க‌ப்​பட்​டுள்​ள‌து.

கர்​நாடக அரசின் இந்த முடிவுக்கு தொழிலா​ளர் சங்​கங்​களும் ஐடி ஊழியர் அமைப்​பு​களும் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன. இதனை கர்​நாடக ஐடி ஊழியர் சங்​கம், நவீன கால கொத்​தடிமை சட்​டம் என விமர்​சித்​துள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.