திருப்பரங்குன்றம் முதல் அறநிலையத் துறை வெளியேற்றம் வரை – முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள்

மதுரை: தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள், மதுரையில் நடந்துவரும் முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தமிழக இந்து முன்னணி சார்பில், மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு இன்று (ஜூன் 22) நடைபெற்றது. இதில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள்:

> கார்த்திகை தீப திருநாளன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும்

> ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான இந்திய ராணுவத்துக்கும், பிரதமர் மோடிக்கு நன்றி.

> தமிழகத்தில் உள்ள குன்றங்கள் அனைத்தும் குமரனுக்கே என்கிற வகையில் அனைத்து மலைகளையும் காக்க வேண்டும்.

> தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும்.

> வரும் தேர்தல் உள்ளிட்ட எந்த தேர்தல் வந்தாலும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்.

> ஒவ்வொரு மாத சஷ்டி தினத்தன்று நாம் அனைவரும் சஷ்டி கவசத்தைப் பாட வேண்டும் ஆகிய 6 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.