சென்னை: தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் திருநங்கை, திருநம்பிகளுக்கான நிபந்தனை தளர்வு செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்ப் புதல்வன் திட்டம்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டமாகும். இந்த திட்டம் கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க ‘தமிழ்ப் புதல்வன்’ […]
