ஒகேனக்கல் தற்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 70,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடக அணைகளான கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயரத் தொடங்கியது. நேற்று ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 57 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இவ்வாறு நீர்வரத்து உயர்ந்ததை […]
