வாளுக்குப் பதில் வேல்… திமுகவினரையும் திருப்பிவிட்ட பாஜக! – முருகனை தூக்கிப் பிடிக்கும் தமிழக அரசியல் களம்!

அரசியல் படுத்தும் பாடு, திமுக-வினரும் தங்களை அறியாமலேயே இப்போது முருகன் பெயரை உச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தளவுக்கு தமிழ்க் கடவுளாம் முருகனை முன்வைத்து இப்போது தமிழக அரசியல் களம் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது.

2021-ல் கருப்​பர் கூட்​டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை ஆபாச​மாக சித்​தரித்​த​தாக சர்ச்சை வெடித்​து, அந்த சேனலைச் சேர்ந்த சுரேந்​திரன் உள்​ளிட்​ட​வர்​கள் கைது செய்​யப்​பட்​டார்​கள். இந்த விவ​காரத்​தைக் கையில் எடுத்த பாஜக கடுமை​யாக எதிர்​வினை​யாற்​றியது. அப்​போது பாஜக மாநில தலை​வ​ராக இருந்த எல்​.​முரு​கன், கருப்​பர் கூட்​டத்​தின் செயலைக் கண்​டித்து தமி​ழ​கம் முழு​வதும் வேல் யாத்​திரை நடத்​தி​னார். அப்​போது ஆளும் கட்​சி​யாக இருந்த அதி​முக இதற்கு கெடு​பிடிகளை தந்த போதும் வேல் யாத்​திரை மூலம் முருக பக்​தர்​களை ஓரணி​யில் திரட்​டியது பாஜக.

அதே​போல, 2023-ல் ஈரோடு மாவட்​டம் சென்​னிமலை முரு​கன் கோயிலை மையப்​படுத்தி தெரிவிக்​கப்​பட்ட சர்ச்​சை​யான கருத்​துகளைக் கண்​டித்து போராட்​டங்​கள் வெடித்​தன. இந்து முன்​னணி​யும் பாஜக-​வும் இணைந்து சென்​னிமலை​யில் நடத்​திய ஆர்ப்​பாட்​டத்​தி​லும் முருக பக்​தர்​கள் திரளாக திரண்டு ஆளும் திமுக அரசை திகைக்க வைத்​தார்​கள்.

அதே​போல, திருப்​பரங்​குன்​றம் மலை தொடர்​பாக வெடித்த சர்ச்​சையை நீதி​மன்​றம் வரைக்​கும் எடுத்​துச் சென்றன இந்து அமைப்​பு​கள். இது தொடர்​பாக நீதி​மன்​றத்​தின் அனு​ம​தி​யுடன் பிப்​ர​வரி 4-ம் தேதி மதுரை பழங்​காநத்​தத்​தில் திடீரென ஏற்​பாடு செய்​யப்​பட்ட ஆர்ப்​பாட்​டத்​தில் ஆயிரக்​கணக்​கானோர் கலந்து கொண்​டதும் ஆளும் கட்​சியை யோசிக்க வைத்​தது.

இப்​படி தொலைநோக்​குத் திட்​டத்​துடன் முரு​கனை அரசி​யல் ஆயுத​மாக எடுத்த பாஜக, இப்​போது அந்த ஆயுதத்தை திமுக உள்​ளிட்ட மற்ற கட்​சிகளை​யும் கையிலெடுக்க வைத்​திருக்​கிறது. அப்​படித்​தான் கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசின் இந்து அறநிலை​யத் துறையே பழனி​யில் அனைத்​துலக முத்​தமிழ் முரு​கன் மாநாட்டை நடத்​தி​யது.

அமைச்​சர் சேகர் பாபு, எ.வ.வேலு, டி.ஆர்​.பி.​ராஜா உள்​ளிட்​ட​வர்​கள் இன்​னும் கந்த சஷ்டி கவசத்தை மட்​டும் தான் படிக்​க​வில்​லை. அந்​தளவுக்கு முரு​கனை தூக்​கிப் பிடிக்க ஆரம்​பித்​திருக்​கி​றார்​கள். விளைவு, திமுக தலை​வர் ஸ்டா​லினுக்கு மேடைகளில் வாள் கொடுத்து பழகிய திமுக-​வினரும் இப்​போது வெள்ளி வேல் கொடுக்​கும் நிலைக்கு வந்​து​விட்​டார்​கள்.

இதையெல்​லாம் உள்​ளார ரசிக்​கும் பாஜக ஜூன் 22-ம் தேதி, இந்து முன்​னணிக்கு பின்​னால் இருந்து கொண்டு மதுரை​யில் முத்​தமிழ் முரு​கன் மாநாட்டை வெற்​றிகர​மாக நடத்தி முடித்​தது. இதையெல்​லாம் பார்த்​து​விட்டு பாமக தலை​வர் அன்​புமணி, “ஜூலை 25-ல் முரு​கனை வணங்கி செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் இருந்து தமி​ழ​கம் முழுக்க 100 நாள் நடைபயணம் தொடங்க இருக்​கிறேன்” என அறி​வித்​திருக்​கி​றார்.

“திருச்​செந்​தூர் முரு​கன் கோயில் குட​முழுக்கு விழா​வில் தமி​ழில் மந்​திரங்​கள் ஓதப்​ப​டா​விட்​டால் போராட்​டத்​தில் குதிப்​போம்” என அறி​வித்​திருக்​கி​றார் முரு​கனை எங்​கள் முப்​பாட்​டன் என முழங்கி வரும் நாதக ஒருக்​கிணைப்​பாளர் சீமான். ஆக, 2026 சட்​டமன்​றத் தேர்​தலில் யாரும் முரு​கனை விட்​டு​வைக்​க​மாட்​டார்​கள் போலிருக்​கிறது.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலை​வ​ரான கே.பி.​ரா​மலிங்​கம், “தமிழ்க் கடவுள் முரு​கன் அரசாட்​சிக்கு உரிய ஆண்​ட​வன். சிலர், கடவுள் மறுப்பு தான் பகுத்​தறிவு என கருதுகின்​ற​னர். ஆனால், முரு​க​னின் வாழ்​வியல் தான் உண்​மை​யான பகுத்​தறி​வு. முரு​கன், தனது பக்​தர்​களுக்கு மட்​டுமல்ல பாதகர்​களுக்​கும் அருள்​பவர். அந்த முரு​கனை தமிழக பாஜக என்​றுமே உயர்த்​திப் பிடித்து வந்​துள்​ளது. அதே​போல், வேஷமின்றி முரு​கனை போற்​றும் அரசி​யல் கட்​சி​களின் அக்​கறை வரவேற்​புக்கு உரியது.

ஆனால், திமுக-​வினரும் திக-​வினரும் முரு​க​னை​யும், கந்த சஷ்டி கவசத்​தை​யும் மேடைக்கு மேடை அவமானப்​படுத்​தி​ய​வர்​கள். இந்​துக் கடவுளை மட்​டும் தான் இவர்​கள் மறுப்​பார்​கள். சிறு​பான்​மை​யினரின் ஓட்​டுக்​காக முதல்​வர் ஸ்டா​லின் கடவுள் மறுப்​புக் கொள்கை எனும் வேஷம் போடுகிறார். ஆனால், அவர் பல வேள்வி​களை நடத்​தி​ய​வர் என்​ப​தற்கு நானே நேரடி சாட்​சி.

முருக பக்​தர்​கள் மீது திமுக மாறு​பட்ட கருத்தை திணித்​தது. அதனால் உரு​வான கொந்​தளிப்​பான சூழலால் தற்​போது முரு​கன் மீதும், முருக பக்​தர்​கள் மீதும் திமுக-வுக்கு பாசம் பொங்​கு​கிறது. இது, திமுக-​வின் தேர்​தலுக்​கான பசப்பு வேலை என மக்​களுக்கு நன்​றாகத் தெரி​யும். ஸ்டா​லின் முரு​கனை மதிப்​பது உண்​மையெனில் தைப்​பூசத்​துக்கு பழனிக்கு காவடி எடுத்து மலை​யேறி வந்து பஞ்​சாமிர்​தம் ருசிக்​கத் தயா​ரா?” என்​றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.