ஜெகன் ஆட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை: பவன் கல்யாண் உறுதி

பிரகாசம்: ஆந்​திர மாநிலத்​தின் பிர​காசம் மாவட்​டம், நரசிம்​மாபுரத்​தில் குடிநீர் திட்​டத்​துக்கு துணை முதல்​வர் பவன் கல்​யாண் நேற்று அடிக்​கல் நாட்​டி​னார்.

விழா​வில் அவர் பேசி​ய​தாவது: 2029-ல் ஆட்​சிக்கு வந்​ததும் எங்​களை ஒரு கை பார்ப்​போம் என முன்​னாள் முதல்​வர் ஜெகன் அடிக்​கடி மிரட்டி வரு​கிறார். சக மனிதர்​களை இவ்​வாறு மிரட்​டிய​தால்​தான் தனக்கு இந்த நிலைமை என்​பதை ஜெகன் இன்​ன​மும் புரிந்து கொள்​ள​வில்​லை. மத்​திய அரசின் ஜல்​ஜீவன் திட்ட நிதியை முந்​தைய ஜெகன் அரசு பயன்​படுத்​த​வில்​லை.

மத்​திய அரசுடன் நாங்​கள் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யதை தொடர்ந்து ஜல்​ஜீவன் திட்​டத்​தின் கீழ் முதல்​கட்​ட​மாக ரூ.1,290 கோடி​யில் இத்​திட்​டத்​துக்கு அடிக்​கல் நாட்​டப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் 10 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மக்​கள் பயன் அடை​வார்​கள். இங்​குள்ள லட்​சுமி சென்​னகேசவுலு கோயில் உட்பட பல்​வேறு கோயில்​களின் நிலங்​களை ஜெகன் ஆட்​சி​யில் அவரது கட்​சி​யினர் ஆக்​கிரமிப்பு செய்​துள்​ளனர். இந்த நிலங்​களை மீட்க தனி கமிட்டி அமைக்​கப்​படும். அதன் மூலம் கோயில் நிலங்​கள் அனைத்​தும் மீட்​கப்​படும். இவ்​வாறு பவன்​ கல்​யாண்​ கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.