வழக்கறிஞரிடம் ரூ.96 லட்சம் மோசடி: அதிமுக ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் கைது

கரூர்: வழக்​கறிஞரிடம் ரூ.96 லட்​சம் மோசடி செய்​த​தாக அதி​முகவைச் சேர்ந்த ஒன்​றியக் குழு முன்​னாள் தலை​வர் நேற்று கைது செய்​யப்​பட்​டார்.

தூத்​துக்​குடியைச் சேர்ந்த பிரின்​ஸ்​கிப்​ஸன் என்​பவர், கரூர் அரு​கே​யுள்ள கோதூரில் 7 ஏக்​கர் நிலம் வாங்​கு​வதற்​காக, கரூரைச் சேர்ந்த நிலத்​தரகர் ஆர்​.எஸ்​.​ராஜா​விடம் முன்​பண​மாக ரூ.96 லட்​சம் கொடுத்​துள்​ளார். ஆனால், அந்த நிலத்தை வாங்க கால​தாமதம் செய்​த​தால், நில உரிமை​யாளர்​கள் அந்​நிலத்தை வேறு ஒரு​வருக்கு விற்​று​விட்​டனர். இதனால் ரூ.96 லட்​சத்தை பிரின்​ஸ்​கிப்​ஸனிடம், ஆர்​.எஸ்​.​ராஜா திரும்​பக் கொடுத்​துள்​ளார்.

அதை வாங்க மறுத்த பிரின்​ஸ்​கிப்​ஸன், தனக்கு நிலம்​தான் வேண்​டும் என்று வலி​யுறுத்​தி​உள்​ளார். இதையறிந்த கரூர் மாவட்​டம் வாங்​கலைச் சேர்ந்த கரூர் ஊராட்சி ஒன்​றியக் குழு முன்​னாள் தலை​வரும், அதி​முக விவ​சாய அணி மாவட்​டச் செய​லா​ள​ரு​மான பால​முரு​கன்​(52), இந்​தப் பிரச்​சினையை முடித்து தரு​வ​தாக ஆர்​.எஸ்​.​ராஜா​விடம் தெரி​வித்​துள்​ளார்.

அதை நம்​பிய ஆர்​.எஸ்​.​ராஜா, கரூர் நீதி​மன்ற வழக்​கறிஞர் ரகு​நாதன் மூல​மாக ரூ.96 லட்​சத்தை கடந்த ஆண்டு நவம்​பரில் பால​முரு​க​னிடம் வழங்​கிய​தாக​வும், அதைப் பெற்​றுக்​கொண்ட பால​முரு​கன், அத்​தொகையை பிரின்​ஸ்​கிப்​ஸனிடம் வழங்​காமல், தானே வைத்​துக்​கொண்​ட​தாக​வும் கூறப்​படு​கிறது.

இதையறிந்த வழக்​கறிஞர் ரகு​நாதன், பால​முரு​க​னிடம் ரூ.96 லட்​சத்தை திருப்​பிக் கேட்​ட​போது, அவர் தர மறுத்​து, கொலைமிரட்​டல் விடுத்​த​தாக மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் பெரோஸ்​கான் அப்​துல்​லா​விடம், ரகு​நாதன் புகார் அளித்​தார்.இதையடுத்​து, மாவட்ட குற்​றப் பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து பால​முரு​கனை நேற்று கைது செய்​தனர். நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்ட பால​முரு​கன், பின்​னர் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.