நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம்: மனித நேய மக்கள் கட்சி மாநாட்டில் வலியுறுத்தல்

மதுரை: உள்​ளாட்​சிகள் முதல் நாடாளு​மன்​றம் வரை சிறு​பான்​மை​யினரின் பிர​தி​நி​தித்​து​வத்தை உறுதி செய்ய வேண்​டும், வக்பு வாரிய திருத்​தச் சட்​டத்தை ரத்து செய்ய வேண்​டும் ஆகிய கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, மதுரை​யில் மனித நேய மக்​கள் கட்சி மாநாடு நேற்று நடை​பெற்​றது. கட்​சித் தலை​வர் ஜவாஹிருல்லா தலைமை வகித்​தார். மாநிலப் பொருளாளர் உமர் வரவேற்​றார்.

கட்​சி​யின் பொதுச் செய​லா​ள​ரும், எம்​எல்​ஏவு​மான அப்​துல்​சமது பேசும்​போது, “நாட்​டில் படிப்​படி​யாக முஸ்​லிம்​களின் பிர​தி​நி​தித்​து​வத்​தைக் குறைக்​கும் சதி நடக்​கிறது. உள்​ளாட்சி அமைப்​பு​களில் சதி செய்து பிரதிநி​தித்​து​வம் குறைக்​கப்​படு​கிறது. நாட்​டில் அடுத்த 10 ஆண்​டு​களில் முஸ்​லிம்​களுக்கு உரிய பிர​தி​நி​தித்​து​வம் கொண்டு வரப்பட வேண்​டும்” என்​றார்.

மாநாட்​டில், தமிழ் மையம் நிறு​வனர் ஜெகத் கஸ்​பர்​ராஜ், ஜோதி​மலை இறைப்​பணி திருக்​கூடம் நிறு​வனர் திரு​வடிக்​குடில் சுவாமிகள் ஆகியோர் பேசினர். பேராசிரியர் அருணன், வழக்​கறிஞர் ஹென்​றி​திபேன், முன்​னாள் எம்​எல்ஏ முரு​கவேல்​ராஜன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

முன்​ன​தாக, மதுரை பாண்​டிகோ​யில் சந்​திப்பு பகு​தியி​லிருந்து மாநாட்​டுத் திடல் வரை பேரணி நடை​பெற்​றது. மாநிலத் தலை​வர் ஜவாஹிருல்லா தலைமை வகித்​தார். மாநாட்​டுத் திடலை பேரணி அடைந்​ததும், அங்கு கட்​சிக் கொடியை ஏற்​றி​வைத்​தார். மாநாட்​டில் நிறைவேற்​றப்​பட்​டத் தீர்​மானங்​கள்:

நாடாளு​மன்​றம், சட்​டப்​பேர​வை​கள் மற்​றும் உள்​ளாட்சி அமைப்​பு​களில் முஸ்​லிம்​களுக்கு உரிய பிர​தி​நி​தித்​து​வம் வழங்க, அனைத்து அரசி​யல் கட்​சிகளும் கொள்கை முடி​வெடுத்​துச் செயல்​படுத்த வேண்​டும்.

மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டத்​தில் உரிய திருத்​தம் செய்​து, முஸ்​லிம்​களுக்​கான அரசி​யல் பிர​தி​நி​தித்​து​வத்தை உறுதி செய்ய வேண்​டும், மின்​னணு வாக்​குப்​ப​திவு முறை​யில் வெளிப்​படைத் தன்மை இல்​லை. இம்​முறை தொடர்​வது ஜனநாயகத்​துக்கு பேராபத்​து. எனவே, வாக்​குச்​சீட்டு முறையைக் கொண்டு வர வேண்​டும்.

இஸ்​ரேலுக்கு அளித்து வரும் ஆதரவை மத்​திய பாஜக அரசு கைவிட்​டு, நாட்​டில் உள்ள இஸ்​ரேலிய நிறு​வனங்​களை வெளி​யேற்ற வேண்​டும், வக்பு வாரிய திருத்த சட்​டத்தை ரத்து செய்ய வேண்​டும். சென்னை புழல் சிறை​யில் விசா​ரணைக் கைதி​கள் மீது தாக்​குதல் நடத்​திய அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுத்​து, நீண்ட நாள் சிறை​வாசிகளுக்கு ஜாமீன் வழங்க வேண்​டும். திருப்​பரங்​குன்​றம் மலை மேல் உள்ள சிக்​கந்​தர் தர்​காவைப் பாது​காக்​க​வும், அங்கு அடிப்​படை வசதி​களைச் செய்​து, மலைப் பாதையைச் செப்​பனிட​வும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்​ என்​பன உள்​ளிட்​ட தீர்​மானங்​கள்​ நிறைவேற்​றப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.