பிஹாரில் தொழிலதிபரும் பாஜக நிர்வாகியுமான கோபால் கெம்கா வீட்டில் சுட்டுக் கொலை

பாட்னா: பிஹாரில் தொழில​திபரும் பாஜக நிர்​வாகி​யு​மான கோபால் கெம்கா அவரது வீட்​டில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார்.

பிஹாரில் பாஜக​வின் முக்​கிய நிர்​வாகி​யாக இருந்​தவர் கோபால் கெம்​கா. பெட்​ரோல் பங்க் நடத்தி வரும் இவருடைய வீடு பாட்​னா​வில் உள்​ளது. இந்​நிலை​யில், வெள்​ளிக்​கிழமை இரவு வெளியி​லிருந்து வீடு திரும்​பிய கெம்​காவை மர்ம நபர் ஒரு​வர் துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்பி ஓடி​விட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. சம்பவ இடத்​திலேயே அவர் உயி​ரிழந்​துள்​ளார். மூன்று ஆண்​டு​களுக்கு முன்பு மகன் கொலை செய்​யப்​பட்ட நிலை​யில் இப்​போது தந்தை சுட்​டுக் கொல்​லப்​பட்​டுள்​ளார்.

இதுகுறித்து பாட்னா காவல் கண்​காணிப்​பாளர் திக் ஷா கூறும்​போது, “கோ​பால் கெம்கா சுட்​டுக் கொல்​லப்​பட்​ட​தாக வெள்​ளிக்​கிழமை இரவு 11 மணி​யள​வில் எங்​களுக்கு தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, போலீ​ஸார் சம்பவ இடத்​துக்​கும் மருத்​து​வ​மனைக்​கும் விரைந்​தனர். சம்பவ இடத்​திலிருந்து ஒரு புல்​லட் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கிறோம். சம்​பவம் நடந்த இடத்​தில் இருந்த சிசிடிவி காட்​சிகளை ஆய்வு செய்து வரு​கிறோம். இந்த வழக்கை விசா​ரிக்க சிறப்பு புல​னாய்​வுக்​குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது” என்​றார்.இந்​நிலை​யில், பிஹாரில் சட்​டம் ஒழுங்கு சீர்​கெட்​டிருப்​ப​தாக எதிர்க்​கட்​சிகள் குற்​றம்​சாட்​டி உள்​ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.