நாளை நடைபெறும் நாடுதழுவிய போராட்டத்துக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: இரா.முத்தரசன் வேண்டுகோள்

திருச்சி: பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அனைத்து தொழிற்​சங்​கங்​கள் சார்​பில் நாளை (ஜூலை 9) நடை​பெற உள்ள பொது வேலை நிறுத்த போராட்​டத்​துக்கு பொது​மக்​கள் ஆதர​வளிக்க வேண்​டும் என்று இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில நிர்​வாகக் குழு மற்​றும் மாவட்டச் செய​லா​ளர்​கள் கூட்​டம் திருச்​சி​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் பங்​கேற்ற கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் முத்​தரசன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் 26-வது மாநாடு ஆகஸ்ட் 15 முதல் 18-ம் தேதி வரை சேலத்​தில் நடை​பெறுகிறது. மாநாட்​டின் 2-ம் நாள் நிகழ்ச்​சி​யில் முதல்வரும், தோழமைக் கட்​சித் தலை​வர்​களும் பங்​கேற்​கின்​றனர்.

பொதுத்​துறை நிறு​வனங்​களை தனி​யாருக்கு விற்​கக் கூடாது என்​பது உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி 9-ம் தேதி (நாளை) அனைத்து தொழிற்​சங்​கங்​கள் இணைந்து நடத்​தும் நாடு தழு​விய வேலைநிறுத்​தப் போராட்​டத்​துக்கு பொது​மக்​கள் ஆதர​வளிக்க வேண்​டும்.

பாஜக என்ற எலிப்​பொறி​யில்​… பாஜக​வுடன் கூட்​டணி வைத்​ததை அதி​முக தொண்​டர்​கள் ஏற்​றுக் கொள்​ள​வில்​லை. இதனால், தங்​கள் கட்​சித் தொண்​டர்​களிட​மிருந்​தும், பாஜக​விட​மிருந்​தும் தன்னை காத்​துக்​கொள்​ளவே அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​கிறார். அவர் பாஜக என்​கிற எலிப்​பொறி​யில் மாட்​டிக்​கொண்டு மீள முடி​யாமல் உள்​ளார்.

திமுக கூட்​ட​ணி​யில் சலசலப்பு ஏற்பட வேண்​டும் என சிலர் விரும்​பு​கிறார்​கள். ஆனால் எங்​கள் கூட்​ட​ ணி​யில் எந்த சலசலப்​பும் இல்லை. எங்​கள் கூட்​டணி உறு​தி​யாக உள்​ளது. திமுக கூட்​ட​ணி​யில் எத்​தனை தொகு​தி​களில் போட்​டி​யிடு​வோம் என்​பது குறித்து பேச்​சு​வார்த்​தை​யின்​போது முடி​வெடுப்​போம். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.