மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பொதுமக்கள் சுயவிவரம் தெரிவிக்க புதிய இணையதளம்

புதுடெல்லி: 2027-ம் ஆண்​டில் இந்​தி​யா​வின் 16-வது மக்​கள் தொகை கணக்​கெடுப்பை நடத்​து​வதற்​கான அறி​விப்பை மத்​திய அரசு கடந்த மாதம் 16-ம் தேதி வெளி​யிட்​டது. அந்த அறி​விப்​பில், லடாக் போன்ற பனிப்​பொழிவு நிறைந்த பகு​தி​களில் அக். 1, 2026 என்ற தேதியை அடிப்​படை​யாகக் கொண்​டும், நாட்​டின் பிற பகு​தி​களில் மார்ச் 1, 2027 என்ற தேதியை அடிப்​படை​யாகக் கொண்​டும் மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் மக்​கள்​தொகை கணக்​கெடுப்​பில், பொது​மக்​கள் சுய​மாக பங்​கேற்​கலாம் என்​றும் அதற்​காக விரை​வில் இணை​யதளம் தொடங்​கப்​படும் என்​றும் மத்​திய அரசு நேற்று அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து மத்​திய அரசின் மூத்த அதி​காரி​கள் கூறிய​தாவது: முதலா​வது டிஜிட்​டல் மக்​கள் தொகை கணக்​கெடுப்​பாகும் இது. இதில் பங்​கேற்​க​வுள்ள கணக்​கெடுப்​பாளர்​கள் ஆன்​டி​ராய்ட், ஆப்​பிள் போன்​கள் வழி​யாக தகவலைத் திரட்​டு​வர். மேலும், இதில் சுயமாக மக்​கள் பங்​கேற்று தங்​களது விவரங்களை தெரிவிக்க இந்த புதிய இணை​யதளம் உதவும்.

மக்​கள் தொகை கணக்​கெடுப்பை நவீனப்​படுத்​து​வதற்​காகவே டிஜிட்​டல் கணக்​கெடுப்பு திட்​டத்​தைத் தொடங்​க​வுள்​ளோம். முதல்​முறை​யாக டிஜிட்​டல் முறை​யில் தகவல்​களைத் திரட்​டி, அதை மத்​திய சர்​வருக்கு எடுத்​துச் செல்​ல​வுள்​ளோம். மக்​கள் சுய​மாக கணக்​கெடுப்​பில் பங்​கேற்​ப​தற்​காக விரை​வில் தனி இணை​யதளத்தை மத்​திய அரசு தொடங்​க​வுள்​ளது. இவ்​வாறு அவர்​கள்​ தெரிவித்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.