இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்

வாஷிங்டன்: இந்​தி​யாவுடன் விரை​வில் வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். உலகம் முழு​வதும் சுமார் 100-க்​கும் மேற்​பட்ட நாடுகளுக்​கான வரி விகிதங்​களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஏப்​ரலில் வெளியிட்​டார்.

இதனால் உலகம் முழு​வதும் பொருளா​தார மந்​தநிலை ஏற்​பட்​டது. அமெரிக்கா உட்பட பல்​வேறு நாடு​களின் பங்​குச் சந்​தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்​பட்​டது. இதன்​காரண​மாக அமெரிக்க அரசின் வரி விதிப்பு திட்​டம் ஜூலை 9-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த கால அவகாசம் தற்​போது ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்டு உள்​ளது.

இந்த சூழலில் 14 நாடு​களுக்​கான புதிய வரி விகிதங்​களை அமெரிக்க அரசு நேற்று வெளி​யிட்​டது. இதன்​படி ஜப்​பானுக்கு 25%, தென்​கொரி​யா​வுக்கு 25%, தாய்​லாந்​துக்கு 36%, மலேசி​யா​வுக்கு 25%, இந்​தோ​னேசி​யா​வுக்கு 32%, தென்​ஆப்​பிரிக்கா​வுக்கு 30%, கம்​போடி​யா​வுக்கு 36%, வங்​கதேசத்​துக்கு 35%, கஜகஸ்​தானுக்கு 25%, துனிசி​யா​வுக்கு 25%, செர்​பி​யா​வுக்கு 35%, லாவோஸுக்கு 40%, மியான்​மருக்கு 40%, போஸ்​னி​யா​வுக்கு 30% வரி விதிக்​கப்​பட்டு உள்​ளது.

இந்த பட்​டியலில் இந்​தியா இடம்​பெற​வில்​லை. அமெரிக்க அரசு கடந்த ஏப்​ரலில் வெளி​யிட்ட அறி​விப்​பின்​போது இந்​தியா மீது 26 சதவீத வரி விதிக்​கப்​பட்​டது. இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நிறுத்தி வைக்​கப்​பட்​டிருக்​கிறது.

இதுதொடர்​பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வாஷிங்​டனில் நேற்று முன்​தினம் கூறும்​போது, “பிரிட்​டன், சீனா​வுடன் வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. அடுத்​த​தாக இந்​தி​யா​வுடன் வர்த்தக ஒப்​பந்​தத்தை ஏற்​படுத்த இறு​திக் கட்​டத்தை நெருங்கி உள்​ளோம். விரை​வில் இரு நாடு​களிடையே வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும்” என்று தெரி​வித்​தார்.

இதுகுறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: இந்​தி​யா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்​பந்​தத்தை இறுதி செய்​வது தொடர்​பாக வாஷிங்​டனில் இரு நாடு​களின் மூத்த அதி​காரி​கள் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றனர்.

ஆகஸ்ட் 1-ம் தேதிக்​குள் இரு நாடு​களிடையே வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மரபணு மாற்​றம் செய்​யப்​பட்ட தானி​யங்​கள், பால் பொருட்​களை இந்​தி​யா​வில் விற்​பனை செய்ய அமெரிக்கா விரும்​பு​கிறது. இதை இந்​தியா ஏற்​க​வில்​லை.

இரு நாடு​கள் இடையே சுமுக​மான முறை​யில் வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்​பட்​டால் இந்​தி​யா​வில் இருந்து ஜவுளி, மருந்​து, நகைகள் அமெரிக்கா​வுக்கு அதிக அளவில் ஏற்​றும​தி​யாக வாய்ப்​பிருக்​கிறது. இதே​போல அமெரிக்​கா​வில் இருந்து கார்​கள் உள்​ளிட்ட வாகனங்​கள் இந்​தி​யா​வுக்கு அதிக அளவில் ஏற்​றுமதி செய்​யப்பட வாய்ப்​பிருக்​கிறது. இவ்​வாறு மத்​தி​ய அரசு வட்​டாரங்​கள்​ தெரிவித்துள்​ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.