பெங்களூருவில் சீட்டு கம்பெனி நடத்தி ரூ.100 கோடி மோசடி செய்த கேரள தம்பதியை தேடும் போலீஸார்

பெங்களூரு: பெங்​களூரு​வில் உள்ள‌ ராமமூர்த்தி நகரை சேர்ந்​தவர் டோமி வர்​கீஸ் (56). இவரது மனைவி ஷைனி (51). கேரள மாநிலத்தை சேர்ந்த இவர்கள் கடந்த 20 ஆண்​டு​களுக்​கும் மேலாக அங்கு ‘ஏ அண்ட் ஏ சிட் ஃபண்ட்​ஸ்’ என்ற சீட்டு நிறு​வனம் நடத்தி வந்​தார். ஆரம்​பத்​தில் ரூ.1 லட்​சம் முதல் ரூ.5 லட்​சம் ரூபாய் வரையி​லான சீட்​டு​களை நடத்​தி, அப்​பகுதி மக்​களின் நம்​பிக்​கை​யைப் பெற்​றனர்.

திடீரென ‘‘எனது உறவினர் ஒரு​வருக்கு உடல்​நிலை சரி​யில்​லை. ஆதலால் ஒரு வாரத்​துக்கு கேரளா​வுக்கு செல்​கிறேன்’’ என முதலீட்டாளர்​களிடம் கூறி​விட்​டு, டோமி வர்​கீஸ் குடும்​பத்​தினருட‌ன் தலைமறை​வா​னார்.

முதலீட்​டாளர்​களால் அவர்களை தொடர்பு கொள்ள முடி​யவில்லை. 500-க்​கும் மேற்​பட்​டோர் ரூ.100 கோடி வரை முதலீடு செய்த​தாகக் கூறப்​படு​கிறது. இது​வரை 275 பேர் வர்​கீஸ், ஷைனி ஆகியோர் மீது ராமமூர்த்தி நகர் போலீஸில் புகார் அளித்​துள்​ளனர். புகாரின் அடிப்​படை​யில், 4 பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​வதாக போலீஸார் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.