144 குதிரைகள் அணிவகுக்க பிரேசிலில் பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு

பிரேசிலியா: பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் உள்ள அந்நாட்டு அதிபரின் அதிகாரபூர்வ வசிப்பிடமான அல்வோரடா மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு நல்கப்பட்டது. 144 குதிரைகள் அணிவகுக்க, இந்திய இசையுடன் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூடவே பிரேசிலின் பாரம்பரிய நடனமான சம்பா நடனத்தையும் அந்நாட்டுக் கலைஞர்கள் ஆடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 6, 7-ம் தேதி​களில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடை​பெற்​றது. இந்த மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார்.

முன்னதாக, ரியோ டி ஜெனிரோ​வில் இருந்து அவர் நேற்று முன்​தினம் இரவு பிரேசில் தலைநகர் பிரேசிலி​யா​வுக்கு சென்​றார். அங்கு விமான நிலை​யத்​தில் பிரேசில் பெண் கலைஞர்​கள் ட்ரம்ஸ் இசைத்து பிரதமர் மோடிக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர். மேலும் ஏராள​மான இந்​தி​யர்​கள் திரண்டு வந்து அவரை வாழ்த்தி வரவேற்​றனர்.

அதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “பிரேசிலி​யா​வில் இந்​திய சமூகத்​தினரின் வரவேற்பு மறக்க முடி​யாத அனுபவம். எங்கு வாழ்ந்​தா​லும் இந்​திய கலாச்​சா​ரத்​தோடு அவர்​கள் ஒன்​றிணைந்து உள்​ளனர். பிரேசிலியா விமான நிலை​யத்​தில் படாலோ முண்டோ குழு​வினரின் ஆப்​பிரிக்க- பிரேசில் இசை மிக​வும் அற்​புத​மாக இருந்​தது. குறிப்​பாக சம்பா நடனம் சார்ந்த இசை சிறப்​பாக இருந்​தது” என்று பதிவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

தொடர்ந்து, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்​வாவை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது வர்த்தகம், பாது​காப்​பு, எரிசக்​தி, விண்​வெளி, தொழில்​நுட்​பம், வேளாண்​மை, சுகா​தா​ரம் தொடர்​பாக பல்​வேறு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

பிரதமர் நரேந்​திர மோடி இன்று பிரேசிலில் இருந்து நமீபி​யா​வுக்கு சென்றார். அப்​போது அந்த நாட்​டுடன் பல்​வேறு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகும் என்​று எதிர்​பார்க்​கப்​படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.