விழுப்புரம்: அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமை ரூ.1500 வழங்கப்படும் என்றும், திமுக அரசு பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றியது என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம் செய்துள்ளார். ‘மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’ என பிரசார பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மயிலம் சட்டமன்றத் தொகுதி நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களிடையே […]
