இத்தனை தொகுதிகள் வேண்டும் என கேட்கவில்லை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து

திருச்சி: ம​தி​முக​வுக்கு இத்​தனை தொகு​தி​கள்​தான் வேண்​டும் என்று நாங்​கள் கேட்​க​வில்​லை. தேர்​தல் நேரத்​தில்​தான் தொகு​தி​களின் எண்​ணிக்கை குறித்து முடிவு செய்​யப்​படும் என்று மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ கூறினார்.

திருச்​சி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: திருச்​சி​யில் செப். 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளை பிரம்​மாண்​ட​மாக கொண்​டாட உள்​ளோம். வாஜ்​பாய் பிரதம​ராக இருந்​த​போது, என்னை தனது சுவீ​கார புத்​திரன் என்​றார். அப்​போது நாங்​கள் பாஜக கூட்​ட​ணி​யில் இருந்​தா​லும், எங்​களது கொள்​கைகளை என்​றும் விட்​டுக்​கொடுத்​தது இல்​லை.

மதி​முக​வுக்கு அங்​கீ​காரம் வழங்​கியதே அதி​முக​தான் என்று முன்​னாள் அமைச்​சர் ஜெயக்​கு​மார் கூறி​யுள்​ளார். எதிர்க்​கட்​சி​யான அதி​முக​வினர் அப்​படித்​தான் பேசு​வார்​கள். பாஜக தமிழகத்தை கபளீகரம் செய்​வதற்கு ஒரு​போதும் அனு​ம​திக்க மாட்​டோம். மோடி பிரதம​ராக பதவி ஏற்​ற​போது, அந்த விழா​வில் அப்​போதைய இலங்கை அதிபர் ராஜபக்ச கலந்து கொண்​டதற்கு எதிர்ப்​புத் தெரி​வித்​து,கூட்​ட​ணியை விட்​டு வெளி​யேறினோம்.

தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி அமை​யும் என அமித்ஷா மீண்​டும் மீண்​டும் கூறிவரு​கிறார். கூட்​டணி ஆட்​சியை தமிழக மக்​கள் ஒரு​போதும் ஏற்​க​மாட்​டார்​கள். திமுக அறு​திப் பெரும்​பான்​மை​யுடன் வெற்றி பெற்​று, மீண்​டும் ஆட்சி அமைக்​கும். மதி​முக​வுக்கு இத்​தனை தொகு​தி​கள் வேண்​டும் என்று நாங்​கள் கேட்​க​வில்​லை. தேர்​தல் நேரத்​தில் தான் பேச்​சு​வார்த்​தை​யின்​போது இதுபற்றி முடிவு செய்​யப்​படும். மல்லை சத்யா கடந்த 4 ஆண்​டு​களாக கட்​சிக்கு விசு​வாச​மாக இல்​லை. அவர் குறித்து எந்த கருத்​தும் கூற விரும்​ப​வில்​லை. இவ்​வாறு அவர் கூறி​னார். பேட்​டி​யின்​போது, மதி​முக முதன்மை செய​லா​ளர் துரை வைகோ எம்​.பி. துணை பொதுச் செய​லா​ளர் டாக்​டர் ரொகையா உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.