பாமக: "என்னுடைய X, Facebook கணக்குகளை மீட்டுத் தாருங்கள்" – டிஜிபி-யிடம் ராமதாஸ் மனு

‘பாமகவின் தலைவர் நானே’ என்று கடந்த மாதம், பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இதனால், பாமக நிறுவனத் தலைவரும், பாமக தலைவரும் ராமதாஸின் மகனுமான அன்புமணிக்கு மோதல் போக்குத் தொடங்கியது.

ராமதாஸ், தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம், கட்சி நிர்வாகிகள் கூட்டங்கள் என நடத்தி வருகிறார்.

இன்னொரு பக்கம், அன்புமணியும் நிர்வாகிகள் கூட்டம், மாநாடு போன்றவற்றை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், ராமதாஸ் தமிழ்நாடு டி.ஜி.பி-யிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.

ராமதாஸ், அன்புமணி
ராமதாஸ், அன்புமணி

அதில் கூறப்பட்டுள்ளதாவது…

“எனது அதிகாரப்பூர்வ எக்ஸ் மற்றும் முகநூல் கணக்குகளை அன்புமணியின் ஆதரவாளர்கள் கைப்பற்றி உள்ளனர்.

எனது சமூக வலைத்தளக் கணக்குகளின் பாஸ்வேர்டுகள் மாற்றப்பட்டுள்ளன.

அவற்றை மீட்டெடுப்பதற்குத் தேவையான தகவல்கள் வேறொருவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதனால், என்னுடைய சமூக வலைத்தளக் கணக்குகளை மீட்டுத் தர வேண்டும்”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.