இந்திய உறவை கெடுக்கும் போலி சமூக வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை

புதுடெல்லி: இந்​தி​யா​வில் உள்ள ஈரான் தூதரகம் நேற்று 4 சமூக வலைதள பதிவு​களை தனது எக்ஸ் தளத்​தில் பகிர்ந்தது. மேலும், இந்​தியா – ஈரான் நல்​லுறவை சீர்​குலைக்க இந்த பதிவு​கள் போலி​யாக வெளி​யிடப்​பட்​டுள்​ளன. அந்​தப் பதிவு​கள் வெளி​யான சமூக வலை​தளங்​கள் ஈரான் அரசின் அதி​காரப்​பூர்​வ​மானவை அல்ல. அவற்​றுக்​கும் ஈரான் அரசுக்​கும் தொடர்​பில்லை என்று எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

ஈரான் தூதரகம் வெளி​யிட்ட 4 போலி சமூக வலைதள பதிவு​களில் ஒன்​றில், ‘‘அமெரிக்க விமானம் இந்​திய வான் பரப்​பில் பறந்து செல்​வதற்கு அனு​மதி அளித்​த​தால், சபாஹர் துறை​முக ஒப்​பந்​தத்தை ஈரான் மறு​பரிசீலனை செய்து வரு​கிறது’’ என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது போலி செய்​தி, போலி எக்ஸ் வலைதள கணக்கு என்று ஈரான் தூதரகம் திட்​ட​வட்​ட​மாக மறுத்​துள்​ளது. மேலும், இந்த பதிவு பாகிஸ்​தானின் கராச்சி நகரில் இருந்து வெளி​யிடப்​பட்​டது கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தி​ய உறவை சீர்​குலைக்க சில சமூகவிரோத சக்​தி​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. இந்​தி​யா​வுட​னான வர்த்​தகம், ஒத்​துழைப்​பு, கலாச்​சார பரி​மாற்​றம் பல ஆண்​டு​களாக வலு​வாக உள்​ளது. அது தொடர்ந்து நீடிக்​கும் என்று ஈரான்​ தூதரகம்​ திட்​ட​வட்​ட​மாக கூறி​யுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.