சித்தராமையா, டி.கே.சிவகுமார் மீது ராகுல் அதிருப்தி: சந்திக்க மறுத்ததால் கர்நாடக அரசியலில் சர்ச்சை

பெங்களூரு: முதல்வர் சித்தராமையா தலைமையில், கர்​நாட​கா​வில் காங்​கிரஸ் அரசு 2 ஆண்​டு​களை நிறைவு செய்​துள்ளது. இந்நிலையில், துணை முதல்வர் டி.கே.சிவகு​மாரின் ஆதர​வாளர்​கள் முதல்​வர் பதவி கேட்டு போர்க்​கொடி தூக்​கி​யுள்​ளனர். இதனால் டி.கே.சிவகு​மார், சித்​த​ராமையா இடையே பனிப்​போர் நீடிக்​கிறது.

இந்​நிலை​யில் இரு​வரும் கடந்த 7-ம் தேதி டெல்​லிக்கு சென்​றனர். அப்​போது காங்​கிரஸ் மூத்த தலை​வரும், மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்​தியை தனித்​தனி​யாக சந்​திக்க அனு​மதி கோரினர். ஆனால் ராகுல் காந்தி சந்​திக்க நேரம் ஒதுக்​க​வில்​லை. இதனால் காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கேவை சந்​தித்​து​விட்டு பெங்​களூரு திரும்​பினர்.

இந்​நிலை​யில் நேற்று மீண்​டும் சித்​த​ராமை​யா​வும், டி.கே.சிவகு​மாரும் டெல்​லிக்கு சென்​றனர். இரு​வரும் ராகுல் காந்​தியை சந்​திக்க நேரம் கேட்​டும், அவர் நேரம் ஒதுக்​க​வில்லை என கூறப்​படு​கிறது. இதனால் இரு​வரும் காங்​கிரஸ் பொதுச்​செய​லா​ளர் ரன்​தீப் சுர்​ஜே​வாலாவை சந்​தித்து பேசினர்.

சித்​த​ராமை​யா, டி.கே.சிவகு​மார் இரு​வரை​யும் ராகுல் சந்​திக்க மறுத்த விவ​காரம் காங்​கிரஸ் வட்​டாரத்​தில் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதுகுறித்து காங்​கிரஸ் மூத்த தலை​வர்​களிடம் விசா​ரித்த போது, ‘‘சித்​த​ராமை​யா​வும், டி.கே.சிவகு​மாரும் முதல்​வர் பதவிக்​காக மோதிக்​கொள்​வது காங்​கிரஸ் ஆட்​சிக்கு மக்​களிடையே அவப்​பெயரை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதனால் ராகுல் அதிருப்தி அடைந்​துள்​ளார். எனவே இரு​வரை​யும் சந்​திக்க நேரம்​ ஒதுக்​க மறுத்​து​விட்​டார்​” என தெரி​வித்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.