விண்ணுக்கு மனிதர்கள் பயணிக்கும் ககன்யான் திட்டத்துக்கான ராக்கெட் டிசம்பரில் பரிசோதனை: இஸ்ரோ தலைவர் தகவல்

நாகர்கோவில்: மனிதரை விண்​ணுக்கு ராக்​கெட்​டில் அனுப்​பும் ககன்​யான் திட்​டத்​தில், ஆளில்லா ராக்​கெட் பரிசோதனை வரும் டிசம்​பர் மாதம் மேற்​கொள்​ளப்​படும் என்று இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன் கூறி​னார்.

கன்​னி​யாகுமரி மாவட்​டம் குலசேகரத்​தில் நடை​பெற்ற இளம் விஞ்​ஞானிகளுக்​கான சிறப்பு பயிலரங்​கில் பங்​கேற்ற வி.​நா​ராயணன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ‘ககன்​யான்’ என்ற திட்டத்தை இஸ்ரோ நடை​முறைப்​படுத்த உள்​ளது. இந்த திட்​டத்​தின்​படி, இந்​தி​யர் ஒரு​வரை ஏ.ஓ.ஜி. முறைப்​படி ராக்​கெட் மூலம் விண்​ணுக்கு அனுப்​பி, அவரை அங்கே பாது​காப்​பாக வைத்​திருந்​து, மீண்​டும் அவரை பாது​காப்​பாக பூமிக்கு அழைத்து வர இருக்​கிறோம். இதற்​கான, சுற்​றுச்​சூழல் மற்​றும் பாது​காப்பு நடவடிக்​கைகள் பற்​றிய ஆய்வு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

இந்த திட்​டம் 2012 ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் மோடி​யால் அறிவிக்​கப்​பட்​டது. அப்​போது இந்த திட்​டத்​துக்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டது தற்​போது ரூ. 20,000 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. வரும் டிசம்​பர் மாதம் ஆளில்லா ராக்​கெட் அனுப்​பப்​படும். தொடர்ந்து இது​போல 2 ராக்​கெட்​கள் அனுப்​பப்​பட்டு பரிசோதனை செய்​யப்​பட்​டும். 2027-ம் ஆண்டு மனிதருடன் ராக்​கெட் அனுப்​பப்​படும்.

ஏஐ தொழில்​நுட்​பம் தொடர்​பான ஆய்​வுக்​கூடங்​களை இஸ்ரோ சார்​பிலும் அமைத்​துள்​ளோம். இது மிகுந்த பயனுள்​ள​தாக உள்​ளது. நில​வுக்கு மனிதனை அனுப்​புவது குறித்​தும் பிரதமர் அறி​வித்​துள்​ளார். நில​வில் ராக்​கெட்டை இறக்​கு​வது எளி​தான விஷ​யம் கிடை​யாது. நம்​மிடம் இருக்​கும் மார்க்-3 ராக்​கெட் பத்​தா​யிரம் கிலோ எடையைத்​தான் கொண்டு செல்​லும். நில​வில் ராக்​கெட்டை இறக்கவேண்​டும் என்​றால் 125 டன் எடையைக் கொண்டு செல்ல வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.