ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி: விழுப்புரம் போலீஸில் பாமக புகார்

விழுப்புரம்: திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் உள்ள தனது வீட்​டில் அதிநவீன ஒட்​டு​கேட்பு கருவி பொருத்​தப்​பட்​டுள்​ள​தாக கடந்த 10-ம் தேதி பாமக நிறுவனர் ராம​தாஸ் கூறி​னார். பின்​னர், சென்​னை​யில் இருந்து தைலாபுரத்​துக்கு கடந்த 12-ம் தேதிசென்ற தனி​யார் துப்​பறி​யும் குழு​வினர் 3 மணி நேரம் ஆய்வு செய்​தனர். அக்​குழு வழங்​கும் அறிக்​கை​யின் அடிப்​படை​யில், அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும் என ராம​தாஸ் குறிப்​பிட்​டிருந்தார்.

இந்​நிலை​யில், விழுப்​புரம் எஸ்​.பி. அலு​வல​கத்​தில் உள்ள சைபர் க்ரைம் பிரி​வில் கூடு​தல் எஸ்​.பி. தினகரனிடம் பாமக தலைமை நிலை​யச் செய​லா​ளர் அன்​பழகன் நேற்று புகார் மனு அளித்​துள்​ளார். அதில், “தைலாபுரத்​தில் உள்ள ராம​தாஸ் வீட்​டில் சட்ட விரோதமாக அதிநவீன ஒட்​டு​கேட்பு கருவி பொருத்​தப்​பட்​டுள்ளது. நிறு​வனர் ராம​தாஸ் இருக்​கை​யில் இல்​லாத​போது அதைப் பொருத்​தி​யுள்​ளனர்.

எனவே, வீடு முழு​வதும் சோதனை செய்​து, மேலும் ஒட்​டு​கேட்பு கருவி​களை பொருத்​தி​யுள்​ளனரா என்​பதை கண்​டறிய வேண்​டும். இது தொடர்​பாக வழக்கு பதிந்து, சட்ட நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும். ராமதாஸ் மற்​றும் அவரது குடும்​பத்​துக்கு போலீஸ் பாது​காப்பு வழங்க வேண்​டும்” என்று குறிப்​பிட்​டுள்​ளார்.

முன்​ன​தாக, சென்​னை​யில் இருந்து தைலாபுரத்​தில் உள்ள வீட்​டுக்கு திரும்​பிய ராம​தாஸ் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “அன்​புமணி​யும், ஜி.கே.மணியும் சந்​தித்​து, என்ன பேசி​னார்​கள் என்று தெரி​யாது. தாயை மகன் சந்​திப்​பதும், மகனை தாய் சந்​திப்​பதும் சகஜமானது” என்​றார். “அன்புமணியை நீங்​கள் சந்​திப்​பீர்​களா?” என்று கேட்​டதற்​கு, “காத்​திருப்​போம், காலம் வந்​து​விடும். மோதல் போக்கு 4 நாள் இருக்​கும். தேர்​தல் வரும், அதை​யும் சந்​திப்​போம்” என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.