சென்னை: மறைந்த பெருந்தலைவர் காமராஜர் குறித்து இல்லாத ஒன்றை கூறி அவதூறாக பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவாவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், காமராசரின் புகழுக்கு களங்கம் கற்பித்த தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். காமராஜர் குறித்து பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவாவின் கருத்துகள் அநாகரீகமானவை என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார். காமராசர் உயிருடன் இருந்தபோதே அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திமுக தலைமை விமர்சித்தது வரலாற்றில் பதிவாகி […]
