நதிநீர் பங்கீடு குறித்து ஆந்திரா – தெலங்கானா முதல்வர்கள் பேச்சு

அமராவதி/ஹைதராபாத்: ஒருங்​கிணைந்த ஆந்​திர மாநிலம் பிரிந்த பின்​னர், நதிநீர் பங்​கீடு, அரசு ஊழியர்​கள் பங்​கீடு, நிதி நிலை பங்​கீடு உள்​ளிட்ட பல்​வேறு பிரச்​சினை​கள் 10 ஆண்​டு​கள் ஆனாலும் இன்​ன​மும் தீர்வு காணப்​ப​டா​மலேயே உள்​ளது.

இதுகுறித்து நேற்று டெல்​லி​யில், மத்​திய நீர்​வளத்​துறை அமைச்​சர் சிஆர். பாட்​டீல் முன்​னிலை​யில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்​டி, இரு மாநில நீர் வளத்​துறை அமைச்​சர்​கள், இரு மாநிலத்​தின் தலைமை செய​லா​ளர்​கள் மற்​றும் இரு மாநில உயர் அதி​காரி​களின் ஆலோ​சனை கூட்​டம் நடை​பெற்​றது.

இதில், ஆந்​திர அரசு தரப்​பில், ஜனகசர்லா – போலா​வரம் லிங்க் அணை கட்​டு​வது குறித்து மட்​டுமே பேசுவ​தாக குறிப்​பிடப்​பட்​டது. ஆனால், தெலங்​கானா அரசு கிருஷ்ணா நதி நீர் பங்​கீடு, சைலம் அணையி​லிருந்து தண்​ணீர் திறந்து விடு​வது, பாலமூரு-ரங்​காரெட்​டி, திண்​டி, சம்​மக்கா சாகர், பிராணஹி​தா-சேவள்ளு அணை விவ​காரம் உள்​ளிட்ட 13 அம்​சங்​களை பட்​டியலில் சேர்த்​திருந்​தது. மொத்​தம் 14 அம்​சங்​கள் குறித்து நேற்று இரு மாநில முதல்​வர்​களும், அமைச்​சர்​களும், அதி​காரி​களும் சுமார் ஒரு மணி நேரம் வரை விவா​தித்​தனர்.

கோதாவரி – ஜனகசர்லா லிங்க் திட்​டம் குறித்து ஆந்​திரா தரப்​பில் மத்​திய நீர் வளத்​துறை​யிடம் அறிக்​கை​யும் வழங்​கப்​பட்​டது. அதில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: கடலில் கலக்​கும் நீரை உபயோகப்​படுத்த இது அரு​மை​யான திட்​டம். இதனால், ஆண்​டுக்கு 200 டிஎம்சி நீர் பாசனத்​திற்​கும், குடி நீர் திட்​டங்​களுக்​கும் பயன்​படுத்​தலாம். இதனால் இரு​மாநிலங்​களுக்​கும் எவ்​வித பிரச்​சினை​யும் இல்​லை.

கடந்த 11 ஆண்​டு​களாக ஆந்​தி​ரா​வின் மேல் பகு​தி​யில் இருக்​கும் தெலங்​கானா மாநிலம் கட்​டிய எந்​தவொரு அணை கட்​டும் திட்​டத்​திற்​கும் ஆந்​திர அரசு முட்​டுக்​கட்டை போட​வில்​லை. ஆதாலால் தெலங்​கா​னா​வின் கீழே உள்ள ஆந்​திர மாநில மக்​களின் நீரா​தா​ரத்தை நினை​வில் கொண்டு மத்​திய நீர்​வளத்​துறை முடி​வெடுக்க வேண்​டும் என அந்த அறிக்​கை​யில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

நட்பு ரீதி​யான பேச்சுவார்த்தை: பேச்சுவார்த்தை முடிந்த பின்​னர், ஆந்​திர மாநில நீர்​வளத்​துறை அமைச்​சர் நிம்மல ராமா​நா​யுடு டெல்​லி​யில் செய்​தி​யாளர்​களிடம் பேசுகை​யில், “நதிநீர் பங்​கீடு குறித்து இரு மாநில முதல்​வர்​களும் நட்பு ரீதி​யாகவே பேசினர். கிருஷ்ணா, கோதாவரி நதி நீரை இரு மாநிலங்​களுக்​கும் உபயோகிக்​கும் முறை, வரையறை குறித்து விவா​திக்​கப்​பட்​டது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.