வங்க மொழி பேசும் மக்களுக்கு துன்புறுத்தல்: முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் போராட்டம்

கொல்கத்தா: ​​பார​திய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்​களில் வங்க மொழி பேசும் மக்​கள் பெரும் துன்​புறுத்​தலுக்கு ஆளாக்கப்படுவதாக கூறி மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி தலை​மை​யில் நேற்று கொல்​கத்​தா​வில் போ​ராட்​டம் நடைபெற்றது.

திரிண​மூல் காங்​கிரஸ் தேசிய பொது செயலர் அபிஷேக் பானர்ஜி உள்​ளிட்ட முக்​கிய தலை​வர்​கள் மற்​றும் ஆயிரக்​கணக்​கான பொது​மக்​கள் இந்த போ​ராட்​டத்​தில் கலந்து கொண்​டனர். இந்த போ​ராட்​டத்​தையொட்டி 1,500 போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். முக்​கிய சாலைகளில் வாக​னப் போக்​கு​வரத்து திருப்​பி​விடப்​பட்​டது.

மேற்கு வங்க மாநிலம் அடுத்த ஆண்டு சட்​டப்​பேரவை தேர்தலை எதிர்​கொள்ள உள்​ளது. இந்த நிலை​யில், பிரதமர் மோடி வருகை தரு​வதற்கு ஒரு​நாள் முன்​ன​தாக நேற்று இந்​தப் போ​ராட்​டம் நடை​பெற்​றது. ஆனால் மம்தா பானர்​ஜி​யின் இந்த போ​ராட்​டத்​துக்கு எதிர்​க்கட்சி தலை​வர் சுவேந்து அதி​காரி கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளார்.

வங்​கமொழி பேசும் ரோஹிங்​கி​யாக்​கள் மற்​றும் சட்​ட​விரோத வங்​கதேச ஊடுரு​வல்​காரர்​களை திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி காப்பாற்​று​வதற்​காக இந்த போ​ராட்​டத்​தை முன்​னெடுத்​துள்​ள​தாக சுவேந்​து அதி​காரி குற்​றம்​ ​சாட்​டி​யுள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.