எஸ்யூவி பிரிவில் மிக விரைவாக 6 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த டாடா பஞ்ச் | Automobile Tamilan


Tata punch sales

இந்தியாவின் துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடலாக உள்ள டாடா பஞ்சினை வெளியிட்டு 4 ஆண்டுகளுக்குள் ஒட்டுமொத்த உற்பத்தி எண்ணிக்கை 6,00,000 கடந்துள்ள நிலையில், விற்பனை எண்ணிக்கையில் 70 % முதல்முறையாக கார் வாங்குபவர்களாக உள்ளனர் என டாடா மோட்டார்ஸ் குறிப்பிட்டுள்ளது.

குளோபல் NCAP மற்றும் பாரத் NCAP என இரு சோதனையிலும் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்று மிகவும் பாதுகாப்பான கார் என்ற பெருமையுடன் ICE, CNG & EV என மூன்றிலும் கிடைக்கின்றது.

Tata Punch SUV

பஞ்ச் எஸ்யூவி மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் எக்ஸ்டர் உள்ள நிலையில், இந்த மாடலை விட மிக சிறப்பான வரவேற்பினை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ள பஞ்ச் வாங்குபவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 70% பேர் முதல் முறையாக கார் வாங்குபவர்கள், இது மட்டுமல்லாமல் பெண்களால் பெரிதும் விரும்பும் மாடலாக உள்ளது என டாடா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Punch.ev உரிமையாளர்களில் 25% பேர் பெண்கள் என உறுதிப்படுத்தியுள்ள நிலையில், மேலும் முதற்கட்ட நகரங்களிலிருந்து 24%, இரண்டாம் கட்ட நகரங்களில் 42% மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களிலிருந்து 34% உரிமையாளர்கள் உள்ளனர்.

2024 ஆம் ஆண்டு இந்தியாவின் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார் என்ற பெருமையை பெற்று மாருதியின் முதலிடத்தை கைப்பற்றியது.

ஆனால் நடப்பு 2025 ஆம் ஆண்டின் H1 எனப்படுகின்ற முதல் 6 மாதங்களில் விற்பனை எண்ணிக்கை 23 % சரிவடைந்துள்ளது. ஜனவரி 2025 முதல் ஜூலை 2025 வரை சுமார் 84,579 யூனிட்டுகளாக பதிவு செய்துள்ளது. ஆனால் முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 1,10,398 ஆக இருந்தது.

Tata punch suv sales milestoneTata punch suv sales milestone

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.