ரூ.12,200 கோடி வளர்ச்சி திட்​டங்​களை தொடங்கிவைக்க பிரதமர் மோடி இன்று பிஹார், மேற்கு வங்கம் செல்கிறார்

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி இன்று பிஹார், மேற்​கு​வங்​கத்​துக்கு செல்​கிறார். அப்​போது ரூ.12,200 கோடி வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்​கிவைக்​கிறார்.

பிஹார் மாநிலம் மோதிஹரி​யில் இன்று காலை அரசு நலத்​திட்ட விழா நடை​பெறுகிறது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்கேற்கிறார். அப்​போது ரூ.7,200 கோடி மதிப்​புள்ள பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டு​கிறார். சில திட்டங்களை அவர் தொடங்கி வைக்​கிறார்.

இதன்​படி பிஹாரின் தர்​பங்​கா​வில் புதிய மென்​பொருள் தொழில்​நுட்ப பூங்​காவை அவர் திறந்து வைக்​கிறார். 4 அம்​ருத் பாரத் ரயில் சேவை​களை அவர் தொடங்கி வைக்​கிறார். பல்​வேறு சாலை, ரயில் திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டு​கிறார். பிஹாரில் மீன்வள மேம்​பாட்​டுத் திட்​டங்​களை அவர் தொடங்கி வைக்​கிறார்.

சுமார் 61,500 சுயஉதவி குழுக்​களுக்கு ரூ.400 கோடியை அவர் விடு​விப்​பார். பிஹாரில் 12,000 ஏழை குடும்​பங்​களுக்கு கான்​கிரீட் வீடு​கள் கட்​டிக் கொடுக்​கப்​பட்டு உள்​ளன. அந்பயனாளி​களிடம், புதிய வீடு​களின் சாவி​களை அவர் வழங்​கு​வார். மேற்கு வங்​கத்​தின் துர்​காபூரில் இன்று பிற்​பகல் அரசு நலத்​திட்ட விழா நடை​பெறுகிறது.

இந்த விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​கிறார். அப்​போது ரூ.5000 கோடி மதிப்​புள்ள பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டு​கிறார். சில திட்​டங்​களை அவர் தொடங்கி வைக்​கிறார்.

இதன்​படி மேற்​கு​வங்​கத்​தின் பங்​குரா மற்​றும் புரூலியா மாவட்​டத்​தில் பாரத் பெட்​ரோலி​யம் கார்ப்​பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) நிறு​வனத்​தின் சுமார் ரூ.1,950 கோடி மதிப்​பிலான நகர எரி​வாயு விநி​யோக (சிஜிடி) திட்​டத்​துக்கு பிரதமர் மோடி அடிக்​கல் நாட்டுகிறார்.

துர்​காபூர்​-ஹால்​டியா இயற்கை எரி​வாயு குழாய் பாதையை அவர் நாட்​டுக்கு அர்ப்​பணிப்​பார். இதன்​மூலம் லட்​சக்​கணக்​கான வீடு​களுக்கு இயற்கை எரி​வாயு எளி​தாக விநி​யோகம் செய்​யப்​படும். புரூலியா – கோட்​ஷிலா இரட்டை ரயில் பாதையை பிரதமர் மோடி நாட்​டுக்கு அர்ப்​பணிப்​பார். இது சரக்​கு ரயில்​ போக்​கு​வரத்​தை அதி​கரி​க்​கும்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.