சமூக விரோதிகள் காவி உடையில் ஊடுருவி கன்வர் யாத்​ரீகர்களின் புகழை கெடுக்க முயற்சி: உ.பி. முதல்வர் குற்றச்சாட்டு

லக்னோ: சமூக விரோ​தி​கள் காவி உடை​யில் ஊடுருவி கன்​வர் யாத்​ரீகர்​களின் புகழை கெடுக்க முயற்​சிகள் நடை​பெறுகின்றன என உ.பி. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் குற்​றம் சாட்​டி​யுள்​ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் கன்வர் யாத்திரை பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மிர்​சாபூர் ரயில் நிலை​யத்​தில் டிக்​கெட் வாங்​கு​வ​தில் மத்​திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர் ஒரு​வருக்​கும், கன்​வர் யாத்​திரை மேற்​கொள்​ளும் பக்​தர்​களுக்​கும் இடையே மோதல் ஏற்​பட்​டது. இதில் சிஆர்​பிஎப் வீரரை தாக்​கிய 3 கன்​வர் யாத்​ரீகர்​கள் கைது செய்​யப்​பட்​டனர்.

இந்​நிலை​யில் உ.பி.​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் ஒன்​றில் பங்​கேற்ற மாநில முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் கூறிய​தாவது: உற்​சாகம் எங்​குள்​ளதோ, அங்​கு​தான் நம்​பிக்​கை​யும், பக்​தி​யும் இருக்​கும் என்​பதை நாம் மனதில் கொள்ள வேண்​டும்.

அந்த உற்சாகத்தை கெடுக்​க​வும், பக்தி மற்​றும் நம்​பிக்​கைக்கு அவப் பெயர் ஏற்​படுத்​த​வும் சில சமூக விரோ​தி​கள் தொடர்ந்து முயற்சிக்கின்​றனர். காவி உடையணிந்த கன்​வர் யாத்​ரீகர்​கள் சாலைகளி​லும், ஓட்​டல்​களி​லும் வன்​முறை​யில் ஈடு​படு​வது போன்ற வீடியோக்​கள் சமூக ஊடகங்​களில் நிறைந்து காணப்​படு​கின்​றன.

சமூக விரோ​தி​கள், கன்​வர் யாத்​திரை​யில் ஊடுருவி அவப் பெயரை ஏற்​படுத்​துகின்​றனர். அவர்​களை கன்​வர் யாத்​ரீகர்​கள் அடையாளம் காட்ட வேண்​டும். அவர்​களிட​மிருந்து வில​கிச் செல்​லுங்​கள். உங்​கள் குழு​வில் அவர்​கள் நுழைவதை அனு​ம​திக்​காதீர்கள். இது குறித்து நிர்​வாகத்​திடம் உடனடி​யாக தெரியப்​படுத்​துங்​கள்​. இவ்வாறு முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.