நட்பாக பழக கட்டாயப்படுத்துவது லவ் ஜிகாத்தில் ஒன்று: ஹரியானா நீதி​மன்றம் தீர்ப்பு

யமுனா நகர்: லவ் ஜிகாத் நாட்​டின் ஒற்​றுமைக்கு ஆபத்து என கூறிய யமுனா நகர் நீதி​மன்​றம், இதற்கு வற்​புறுத்​திய நபருக்கு 7 ஆண்டு சிறை தண்​டனை விதித்து தீர்ப்​பளித்​தது. ஹரி​யானா மாநிலத்​தில் உள்ள யமுனா நகரைச் சேர்ந்த 14 வயது சிறுமி காவல் நிலை​யத்​தில் கடந்த ஆண்டு நவம்​பர் மாதம் புகார் அளித்​தார்.

அதில் பள்​ளிக்கு செல்​லும் போது முஸ்​லிம் இளைஞர் ஒருவர் பின்​தொடர்ந்து வரு​வ​தாக​வும், அவருடன் நட்​பாக பழகும்​படி ஷாபாஜ் என்​பவர் வற்​புறுத்​துகிறார் என கூறி​னார். இதன் அடிப்​படை​யில் ஷாபாஜ் மீது குற்ற சதி, போக்சோ சட்​டத்​தின் கீழ் பாலியல் தொந்​தரவு உட்பட பல பிரிவு​களின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டது.

இந்த வழக்கை விசா​ரித்த யமு​னாநகர் நீதி​மன்​றம் அளித்த தீர்ப்​பில் கூறிய​தாவது: மைனர் இந்​துச் சிறுமியை, முஸ்​லிம் இளைஞரிடம் நட்​பாக பழகும்​படி வற்​புறுத்​து​வதும் ‘லவ் ஜிகாத்​’​தில் ஒன்​று. இது​போன்ற செயல்​கள் நாட்​டின் ஒற்​றுமைக்கு அச்சுறுத்தலை ஏற்​படுத்​துகிறது.

இந்த குற்​றத்​துக்​காக சிறுமியை வற்​புறுத்​திய ஷாபாஜ்க்கு 7 ஆண்டு சிறை தண்​டனை​யும், ரூ.1 லட்​சம் அபராத​மும் விதிக்கப்படுகிறது. இவ்​வாறு யமு​னாநகர் நீதி​மன்​றம்​ தீர்ப்​பளித்​துள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.