நீதித்துறை முடிவெடுப்​பதில் ஏஐ பயன்படுத்த தடை: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

கொச்சி: மாவட்ட நீதித் துறை​யின் நீதி​மன்ற செயல்​பாடு​களில் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழிநுட்​பத்​தின் பொறுப்​பான மற்றும் கட்​டுப்​படுத்​தப்​பட்ட பயன்​பாடு தொடர்​பான கொள்​கையை கேரள உயர்​நீ​தி​மன்​றம் வெளி​யிட்​டுள்​ளது.

அதில், ஏஐ தொழில்​நுட்​பத்தை கண்​மூடித்​தன​மாக பயன்​படுத்​து​வது தனி​யுரிமை உரிமை​களை மீறு​தல், தரவு பாது​காப்பு அபாயங்கள், நீதித் துறை முடி​வெடுப்​ப​தில் நம்​பிக்கை இழப்பு உள்​ளிட்ட எதிர்​மறை​யான விளைவு​களை ஏற்​படுத்​தக்​கூடும் என்பதால் மாவட்ட நீதித் துறை அதன் பயன்​பாட்​டில் தீவிர முன்​னெச்​சரிக்​கை​யுடன் இருக்க வேண்​டும்.

நீதி​மன்ற உத்​தர​வு​களை மொழிபெயர்க்க சாட்​ஜிபிடி, ஜெமினி, டீப்​ஸீக் போன்ற ஏஐ தொழில்​நுட்​பங்​களை பயன்​படுத்​தக்​கூ​டாது. ஏஐ கருவி​கள் பொறுப்​பான முறை​யில் பயன்​படுத்​தப்​படு​வதை உறுதி செய்ய வேண்​டும். ஏஐ நீதித் துறை முடிவு​களை எடுப்பதற்கோ அல்​லது சட்​டப்​பூர்​வ​மான பகுத்​தறி​யும் பணி​களுக்​கோ மாற்​றாக பயன்​படுத்​தப்​படு​வ​தில்லை என்​பதை உறுதி செய்ய வேண்​டும்.

நீதித் துறை ஊழியர்​கள் தங்​கள் கடமை​களை நிறைவேற்​று​வ​தில் வெளிப்​படைத் தன்​மை, ரகசி​யத்​தன்​மை, நியா​யத்​தன்​மை, பொறுப்​புணர்வை உறுதி செய்ய வேண்​டும் என்​பதே இந்த கொள்​கை​யின் நோக்​கம். இதனை மீறு​வது ஒழுங்கு நடவடிக்கைக்கு வழி​வகுக்​கும். இவ்​வாறு கேரள உயர் நீதி​மன்​றம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.