சென்னை துணை முதல்வர் உதயநிதி இன்று 2457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி உள்ளார். இன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி […]
