தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த நோய்வாய்ப்பட்ட நாய்களை கருணைக்கொலை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நாய்க்கடியின் காரணமாக மனிதர்களிடையே ரேபிஸ் நோய் தொற்றும் அதிகரிப்பதை அடுத்து இந்த பிரச்சனைகக்கு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் நோய்வாய்ப்பட்டு சிரமப்படும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. […]
