ஆர்.எஸ்.எஸ். இல்லையென்றால் இந்தியா ஒரு முஸ்லிம் நாடாக மாறியிருக்கும் என்று கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக எம்.பி.யுமான ஜெகதீஷ் ஷெட்டர் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் பிரியங்க் கார்கே, “ஆர்எஸ்எஸ் இந்திய நாட்டுக்கு செய்த 10 பங்களிப்பையாவது குறிப்பிடுங்கள்” என்று ஷெட்டருக்கு சவால் விடுத்துள்ளார். மேலும், “ஆர்.எஸ்.எஸ். நூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு அமைப்பு, ஆனால் ‘இந்து’ என்று அடையாளப்படுத்தும் மத நடைமுறைகள் […]
