மத்திய அரசு திட்டத்தின் கீழ் ரூ.140 கோடி மோசடி செய்த தந்தை, மகன் கைது

ஹைதராபாத்: ஆந்​திர மாநிலத்தை சேர்ந்த டி.​ராம​தாசப்ப நாயுடு (61) மத்​திய அரசின் பிரதம மந்​திரி முத்ரா யோஜனா திட்​டத்​தின் கீழ் ‘முத்ரா விவ​சாய திறன் மேம்​பாட்டு மல்டி ஸ்டேட் கூட்​டுறவு சொசைட்​டி’ நிறுவனத்தை கடந்த 2020-ல் தொடங்​கி​னார். இதில் முக்​கிய நிர்​வாகி​யாக இவரது மகன் சாய் கிரண் (45) நியமனம் செய்​யப்​பட்​டார்.

தந்​தை​யும், மகனும் இணைந்து இந்த கூட்​டுறவு சங்​கத்​தில் 2000 பேருக்கு மார்க்​கெட்​டிங் சூப்​பர்​வைஸர் வேலை வழங்​கு​வ​தாக ஒரு பத்​திரி​கை​யில் விளம்​பரம் செய்​தனர். இதனை நம்பி ஆந்​திரா மற்​றும் தெலங்​கானா மாநிலத்தை சேர்ந்த 1,600 பேர் சேர்ந்​தனர். சங்​கத்​தில் பணம் முதலீடு செய்​பவர்​களுக்கு அதிக வட்டி வழங்​கு​வோம் என பொது​மக்​களிடம் கூறி, ஆட்​களை சேர்க்க வேண்​டும் என இலக்​கும் கொடுத்​தனர்.

அதன்​படி, 1,300 ஊழியர்​களும் விவ​சா​யிகள், நடுத்தர குடும்​பத்​தினர், தினக்​கூலி ஆட்​கள் என பல தரப்​பட்​ட​வர்​களை உறுப்​பினர்​களாக சேர்த்து ரூ.140 கோடி வரை பணத்தை செலுத்த வைத்​தனர்.ஆனால், பணம் மெச்​சூரிட்டி ஆகி​யும் பொது​மக்​களுக்கு பணத்தை தராமல் இழுத்​தடித்​தனர்.

இதனால் கோபம் அடைந்த பணி​யாளர்களில் சிலர் ஹைத​ரா​பாத் உட்பட பல போலீஸ் நிலை​யங்​களில் தந்​தை, மகன் மீது புகார் அளித்​தனர். மேலும், பாதிக்​கப்​பட்ட பொது​மக்​களும் புகார் அளித்​தனர். இதன் அடிப்படையில் இரு​வர் மீதும் வழக்​கு​ பதிவு செய்​யப்​பட்​டது. இதையடுத்து இந்த வழக்​கு​களில் தெலங்​கானா சிஐடி விசா​ரணை மேற்​கொண்​டது. இதில் பல தரப்​பட்ட சாட்​சி​யங்​கள் நிரூபணம் ஆனதால், நேற்று ராம​தாசப்​பாவை​யும், அவரது மகன்​ சாய்​ கிரணை​யும்​ சிஐடி போலீ​ஸார்​ கைது செய்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.