கூட்​டுறவு, ரயில்வே துறைகளுக்கு ரூ.13 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: கூட்​டுறவு, ரயில்வே உள்​ளிட்ட பல முக்​கிய திட்​டங்​களுக்கு மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் வழங்​கியது. அதன் படி, தேசிய கூட்​டுறவு மேம்​பாட்டு கழகத்​திற்கு (என்​சிடிசி) நான்கு ஆண்​டு​களுக்கு ரூ.2,000 கோடி மானிய உதவி வழங்க பிரதமர் மோடி தலை​மை​யில் நடை​பெற்ற பொருளா​தார விவ​காரங்​களுக்​கான அமைச்​சரவை குழு கூட்​டத்​தில் ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது.

கடன் வழங்​கல் நடவடிக்​கைகளுக்கு இது மிக​வும் உதவி​யாக இருக்​கும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. 29 கோடி உறுப்​பினர்​களைக் கொண்ட 8.25 லட்​சத்​துக்​கும் அதி​க​மான கூட்​டுறவு​களுக்கு என்​சிடிசி கடன்​களை வழங்​கு​கிறது.

இதில் உள்ள மொத்த உறுப்​பினர்​களில் 94 சதவீதம் பேர் விவ​சா​யிகள். இதேபோன்​று, உணவு பதப்​படுத்​தும் துறையை மேம்​படுத்​து​வதற்​கான முதன்மை திட்​ட​மான பிர​தான் மந்​திரி கிசான் சம்​பதா யோஜனா (பிஎம்​கேஎஸ்​ஒய்) பட்​ஜெட் ஒதுக்​கீட்டை மத்​திய அமைச்​சரவை ரூ.1,920 கோடி அதி​கரித்து ரூ.6,520 கோடி​யாக உயர்த்​தி​யுள்​ளது.

ரயில்வே அமைச்​சகத்​தின் சுமார் ரூ.11,169 கோடி மதிப்​பிலான நான்கு திட்​டங்​களுக்கு மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் வழங்​கியது. இதன்​மூலம், 6 மாநிலங்​களில் 13 மாவட்​டங்​களை உள்​ளடக்​கிய நான்கு மல்டி டிராக் ரயில் திட்​டங்​கள்
செயல்​படுத்​தப்​பட உள்​ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.