அமெரிக்காவில் காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் சடலமாக மீட்பு

புதுடெல்லி: அமெரிக்​கா​வில் காணா​மல் போன ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 4 இந்​தி​யர்​கள் சடல​மாக மீட்​கப்​பட்​டனர். அவர்​கள் கார் விபத்​தில் சிக்கி உயி​ரிழந்​தது தெரிய​வந்​துள்​ளது. இந்​தி​யர்​களான கிஷோர் திவன் (89), ஆஷா திவன் (85), ஷைலேஷ் திவன் (86) மற்றும் கீதா திவன் (84) ஆகிய 4 பேரும் அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் வசித்து வந்​தனர்.

இவர்​கள் கடந்த வாரம் மேற்கு வர்​ஜினி​யா​வின் மார்​ஷல் மாவட்​டத்​தில் உள்ள பிரபுப​டாஸ் பேலஸ் ஆப் கோல்டு என்ற புகழ் பெற்ற கோயிலுக்கு காரில் பயணம் செய்​துள்​ளனர். இந்​நிலை​யில் ஜூலை 31-ம் தேதி முதல் அவர்​களை தொடர்​பு​கொள்ள முடிய​வில்லை என குடும்​பத்​தினர் காவல் துறை​யில் புகார் செய்​துள்​ளனர்.

ஓஹியோ மாவட்ட போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். அப்போது, பிக் வீலிங் கிரீக் சாலை​யில் அவர்​கள் சென்ற கார் விபத்​தில் சிக்கி இருந்​தது ஆகஸ்ட் 2-ம் தேதி தெரிய​வந்​தது. அங்​கிருந்து அந்த 4 பேரின் உடல்​களும் மீட்​கப்​பட்​டன. இந்த தகவலை மார்​ஷல் மாவட்ட அதி​காரி மைக் டவு​கெர்டி தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து போலீ​ஸார்​ வி​சா​ரிக்கின்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.