சிறப்பான புலன் விசாரணை மற்றும் அர்ப்பணிப்புடன் பணி: 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கம்

சென்னை: சுதந்​திர தினத்தை முன்​னிட்டு 15 காவல்​துறை அதி​காரி​களுக்கு தமிழக அரசு சிறப்பு பதக்​கங்​களை அறி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக, உள்​துறை செயலர் தீரஜ் குமார் நேற்று வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: புலன் விசா​ரணைப் பணி​யில் மிகச் சிறப்பாக பணி​யாற்​றியதை அங்​கீகரிக்​கும் வகை​யிலும், பணி​யில் ஈடு​பாடு மற்​றும் அர்ப்​பணிப்​புடன் பணிபுரிந்​ததை பாராட்டும் வகை​யிலும் 10 காவல் ​துறை அதி​காரி​கள், 2025-ம் ஆண்டு சுதந்​திர தினத்தை முன்​னிட்​டு, தமிழக முதல்​வரின் காவல் புலன் விசா​ரணைக்​கான சிறப்​புப் பணிப் பதக்​கங்​கள் வழங்க தேர்ந்​தெடுக்​கப்பட்​டுள்​ளனர்.

அவர்​களின் பெயர் விபரம்: சென்னை குற்​றப்​பிரிவு குற்​றப்​புல​னாய்​வுத் துறை, சைபர் கிரைம் செல் பிரிவு, காவல் துணை கண் காணிப்​பாளர் பூரணி, திருநெல்​வேலி குற்​றப்​பிரிவு குற்​றப்​புல​னாய்​வுத் துறை, காவல் ஆய்​வாளர் உலக​ராணி, சென்னை குற்​றப்​பிரிவு குற்​றப்​புல​னாய்​வுத் துறை, கடத்​தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்​வாளர் லதா, சேலம் மாவட்​டம் மகுடஞ்​சாவடி காவல் நிலைய காவல் ஆய்​வாளர் செந்​தில் குமார், தஞ்​சாவூர் குற்​றப்​பிரிவு குற்​றப்​புல​னாய்வு துறை துணை காவல் கண்​காணிப்​பாளர் கல்ப​னாதத், திண்​டுக்​கல் குற்​றப்​பிரிவு குற்​றப்​புல​னாய்​வுத் துறை, காவல் ஆய்​வாளர் சந்தானலட்​சுமி, திருப்​பூர் மாவட்டம், பெரு ​மாநல்​லூர் காவல் நிலைய, காவல் ஆய்வாளர் வசந்​தகு​மார், திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய, காவல் ஆய்​வாளர் ஜெக​நாதன், அரியலூர், குற்றப்​புல​னாய்​வுத் துறை, காவல் ஆய்​வாளர் தில​காதே​வி, நாகப்​பட்​டினம், குற்​றப்​பிரிவு குற்​றப்​புல​னாய்​வுத் துறை, காவல் ஆய்​வாளர் புவனேஸ்​வரி.

இதே போன்​று, பொது​மக்​களின் சேவை​யில் தன்​னலம் கரு​தாமல் சிறப்​பாக செயல்​பட்டு சீரிய பணி​யாற்​றிய 5 காவல் துறை அதி​காரி​களுக்​கு, 2025-ம் ஆண்டு சுதந்​திர தினத்தை முன்​னிட்டு அவர்​களது பணி​யைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்​கான தமிழக முதலமைச்​சரின் காவல் பதக்​கங்​கள் வழங்க தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளனர்.

இதன்​படி, சிறைத்​துறை கூடு​தல் டிஜிபி மஹேஷ்வர் தயாள், நுண்​ணறிவு பிரிவு (உள்​​நாட்டு பாது​காப்பு ) டிஐஜி மகேஷ், திருநெல்​வேலி காவல் கண்​காணிப்​பாளர் சிலம்​பரசன், சென்னை தலை​மையக தனிப்​பிரிவு குற்​றப்​புல​னாய்​வுத் துறை கூடு​தல் காவல் கண்​காணிப்​பாளர் பிர​வின்​கு​மார், சென்னை காவல் ஆய்​வாளர் மேரிரஜு ஆகியோ​ருக்கு அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. விருதுகள் பெறு​வோர் ஒவ்​வொரு​வருக்​கும் தலா 8 கிராம் தங்​கப் பதக்​க​மும், ரூ.25 ஆயிரம் ரொக்​கப் பரிசும் வழங்​கப்​படும். இந்த விருதுகள் முதல்​வ​ரால் மற்​றொரு விழா​வில் வழங்​கப்​படும்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.